என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
மயிலத்தில் இலவச மருத்துவ முகாம்
Byமாலை மலர்6 Oct 2018 4:49 PM GMT (Updated: 6 Oct 2018 4:49 PM GMT)
அரசு பொது சுகாதாரம் மற்றும் நோய் தடுப்பு மருந்துத்துறை சார்பில் இலவச மருத்துவ முகாம் மயிலம் அரசு நடுநிலைப்பள்ளி வளாகத்தில் நடைபெற்றது
மயிலம்:
அரசு பொது சுகாதாரம் மற்றும் நோய் தடுப்பு மருந்துத்துறை சார்பில் இலவச மருத்துவ முகாம் மயிலம் அரசு நடுநிலைப்பள்ளி வளாகத்தில் நடைபெற்றது இதற்கு மயிலம் வட்டார மருத்துவ அலுவலர் டாக்டர் தேன்மொழி தலைமை தாங்கினார். மயிலம் வட்டார சுகாதார ஆய்வாளர் வாசு வரவேற்றார். மயிலம் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் டாக்டர் மாசிலாமணி சிறப்பு அழைப்பாளராக கலந்துகொண்டு, மருத்துவ முகாமை குத்துவிளக்கேற்றி தொடங்கி வைத்தார். தொடர்ந்து அனைவருக்கும் நிலவேம்பு கசாயம் வழங்கப்பட்டது. இதில் நெடிமோழியனூர் சுகாதார மருத்துவ அலுவலர் டாக்டர் பாரதிதாசன் மேற்பார்வையில் டாக்டர் செந்தில்குமார், பாலாஜி, யோகேஸ்வரி ஆகியோரை கொண்ட மருத்துவ குழுவினர் கலந்து கொண்டு பொது சுகாதாரம், சர்க்கரை நோய், குழந்தை மருத்துவம் உள்ளிட்ட நோய்களுக்கு சிகிச்சை அளித்தனர்.
முகாமில் சுகாதார மேற்பார்வையாளர் துரைசாமி, மயிலம் ஒன்றிய தி.மு.க. இளைஞரணி செயலாளர் செல்வகுமார், மாவட்ட சிறுபான்மை பிரிவு அமைப்பாளர் அன்சாரி, ஊராட்சி செயலாளர்கள் தேசிங்கு, சங்கர் மற்றும் கிராம மக்கள் கலந்துகொண்டனர். முடிவில் முப்புளி சுகாதார ஆய்வாளர் மணி நன்றி கூறினார்.
அரசு பொது சுகாதாரம் மற்றும் நோய் தடுப்பு மருந்துத்துறை சார்பில் இலவச மருத்துவ முகாம் மயிலம் அரசு நடுநிலைப்பள்ளி வளாகத்தில் நடைபெற்றது இதற்கு மயிலம் வட்டார மருத்துவ அலுவலர் டாக்டர் தேன்மொழி தலைமை தாங்கினார். மயிலம் வட்டார சுகாதார ஆய்வாளர் வாசு வரவேற்றார். மயிலம் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் டாக்டர் மாசிலாமணி சிறப்பு அழைப்பாளராக கலந்துகொண்டு, மருத்துவ முகாமை குத்துவிளக்கேற்றி தொடங்கி வைத்தார். தொடர்ந்து அனைவருக்கும் நிலவேம்பு கசாயம் வழங்கப்பட்டது. இதில் நெடிமோழியனூர் சுகாதார மருத்துவ அலுவலர் டாக்டர் பாரதிதாசன் மேற்பார்வையில் டாக்டர் செந்தில்குமார், பாலாஜி, யோகேஸ்வரி ஆகியோரை கொண்ட மருத்துவ குழுவினர் கலந்து கொண்டு பொது சுகாதாரம், சர்க்கரை நோய், குழந்தை மருத்துவம் உள்ளிட்ட நோய்களுக்கு சிகிச்சை அளித்தனர்.
முகாமில் சுகாதார மேற்பார்வையாளர் துரைசாமி, மயிலம் ஒன்றிய தி.மு.க. இளைஞரணி செயலாளர் செல்வகுமார், மாவட்ட சிறுபான்மை பிரிவு அமைப்பாளர் அன்சாரி, ஊராட்சி செயலாளர்கள் தேசிங்கு, சங்கர் மற்றும் கிராம மக்கள் கலந்துகொண்டனர். முடிவில் முப்புளி சுகாதார ஆய்வாளர் மணி நன்றி கூறினார்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X