search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    ஈரோட்டில் அடையாளம் தெரியாத வாகனம் மோதி பெண் பலி
    X

    ஈரோட்டில் அடையாளம் தெரியாத வாகனம் மோதி பெண் பலி

    ஈரோட்டில் அடையாளம் தெரியாத வாகனம் மோதி பெண் பலியான சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    ஈரோடு:

    ஈரோடு வீரப்பன்சத்திரம், விவேகானந்தர் ரோடு பகுதியை சேர்ந்தவர் மணிவண்ணன். இவரது மனைவி முத்துலட்சுமி (வயது 43). கணவன், மனைவி இருவரும் கூலி வேலை பார்த்து வந்தனர்.

    இந்த நிலையில் நேற்று இரவு முத்துலட்சுமி வழக்கம் போல் வேலையை முடித்து கொண்டு ஈரோடு வெட்டு காட்டு வலசு பிரிவில் நடந்து வந்து கொண்டிருந்தார்.

    அப்போது அந்த வழியாக வந்த அடையாளம் தெரியாத வாகனம் ஒன்று அவர் மீது மோதியது. இதில் முத்துலட்சுமி பலத்த காயம் அடைந்தார்.

    இதை கண்ட அந்த வழியாக வந்தவர்கள் முத்து லட்சுமியை மீட்டு சிகிச்சைக்காக ஈரோடு அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அவரை பரிசோதித்த டாக்டர்கள் முத்து லட்சுமி வரும் வழியிலேயே இறந்து விட்டதாக தெரிவித்தனர்.

    இதுகுறித்து வீரப்பன் சத்திரம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    Next Story
    ×