search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    தேவதானப்பட்டி கோவில் திருவிழாவில் மோதலில் ஈடுபட்ட கும்பல்
    X

    தேவதானப்பட்டி கோவில் திருவிழாவில் மோதலில் ஈடுபட்ட கும்பல்

    தேவதானப்பட்டி கோவில் திருவிழாவில் மோதலில் ஈடுபட்ட கும்பல் மீது போலீசார் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.

    தேனி:

    தேவதானப்பட்டி அருகே ஜெயமங்கலத்தில் ஸ்ரீகவுமாரியம்மன கோவில் திருவிழா நடந்து வருகிறது. இத்திருவிழாவில் அக்ரகார தெருவை சேர்ந்த காமுத்துரை என்பவர் மைக்செட் போடும் வேலை பார்த்து வந்தார்.

    சம்பவத்தன்று இரவு 10 மணிக்கு மைக்செட்டை அணைத்து விட்டு வீட்டிற்கு செல்ல முயன்றார். அப்போது அங்கு வந்த ஒரு கும்பல் பாட்டை போடுமாறு அவரிடம் தகராறு செய்தனர்.

    ஆனால் 10 மணிக்கு மேல் பாட்டு போடக்கூடாது என்று போலீசார் கூறி உள்ளனர் என காமுத்துரை தெரிவித்தார். பாட்டை போடாவிட்டால் உன்னை அடித்தே கொலை செய்துவிடுவோம் என மிரட்டி தாக்கி உள்ளனர்.

    இது குறித்து ஜெயமங்கலம் போலீஸ் நிலையத்தில் காமுத்துரை புகார் அளித்தார். அதன் பேரில் போலீசார் கோட்டை முருகன் (வயது33), மச்சக்கண்ணன் (40), ஆனந்த் (25), கார்த்திக் (27), முத்துப்பாண்டி (28), திலகர் (27) உள்பட மேலும் சிலர் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    Next Story
    ×