search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    சபரிமலை விவகாரம்: மத நம்பிக்கையை காப்பாற்ற சாகும் வரை போராடுவேன் - சுரேஷ்கோபி
    X

    சபரிமலை விவகாரம்: மத நம்பிக்கையை காப்பாற்ற சாகும் வரை போராடுவேன் - சுரேஷ்கோபி

    சபரிமலை விவகாரத்தில் மத நம்பிக்கையை காப்பாற்ற சாகும் வரை போராட தயாராக உள்ளேன் என்று சுரேஷ்கோபி எம்.பி. கூறினார். #SureshGopi #Sabarimala
    நாகர்கோவில்:

    திருவிதாங்கூர் மன்னர் ஆட்சி காலத்தில் குமரி மாவட்டம் பத்மநாபபுரம் அரண்மனையில் ஆண்டுதோறும் நவராத்திரி விழா சிறப்பாக கொண்டாடப்பட்டு வந்தது.

    1840-ம் ஆண்டில் சுவாதி திருநாள் மகாராஜா காலத்தில் நவராத்திரி விழா திருவனந்தபுரத்துக்கு மாற்றப்பட்டது. திருவனந்தபுரத்தில் நடைபெறும் இந்த நிகழ்ச்சியில் குமரி மாவட்டத்தில் இருந்து சுசீந்திரம் முன்னுதித்த நங்கை அம்மன், குமார கோவில் வேளிமலை முருகன் மற்றும் பத்மநாபபுரம் தேவாரக்கட்டு சரஸ்வதி அம்மன் ஆகிய சாமி சிலைகள் பங்கேற்பது வழக்கமாக இருந்து வருகிறது.

    இந்த ஆண்டுக்கான நவராத்திரி விழா வருகிற 10-ந் தேதி தொடங்குகிறது. இதில் பங்கேற்பதற்காக சுசீந்திரம் முன்னுதித்த நங்கை அம்மன் சிலை இன்று ஊர்வலமாக புறப்பட்டது.

    சுசீந்திரம் முன்னுதித்த நங்கை அம்மன் சிலை தமிழக, கேரள போலீசாரின் அணிவகுப்பு மரியாதையுடன் திருவனந்தபுரத்திற்கு புறப்பட்டுச் சென்ற காட்சி.


    அப்போது கேரள, தமிழக போலீசார் துப்பாக்கி ஏந்தி அணிவகுப்பு மரியாதை செலுத்தினர். இந்த நிகழ்ச்சியில் பிரபல நடிகரும், எம்.பி.யுமான சுரேஷ்கோபி கலந்து கொண்டு தரிசனம் செய்தார்.

    சபரிமலை தீர்ப்பு என்பது தனி வி‌ஷயம். அது குறித்து நான் அரசியல் ரீதியாக எதுவும் கூற விரும்பவில்லை. ஆனால் செய்ய வேண்டியது நிறைய உள்ளது.

    சுப்ரீம் கோர்ட்டு தீர்ப்பு என்பது வேறு, மத நம்பிக்கை என்பது வேறு. நாங்கள் கடவுள் நம்பிக்கை உடையவர்கள். பாரம்பரிய கலாசாரம், மத நம்பிக்கையை காப்பாற்ற சாகும் வரை போராடவும் தயாராகவும் உள்ளேன். போராட்டத்துக்கு முன் நிற்கவும் தயாராக உள்ளேன்.

    இவ்வாறு அவ்வாறு கூறினார்.  #SureshGopi #Sabarimala

    Next Story
    ×