என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
முத்துப்பேட்டை அருகே எம்எல்ஏ கார் டிரைவர் குளத்தில் மூழ்கி பலி
Byமாலை மலர்6 Oct 2018 5:02 AM GMT (Updated: 6 Oct 2018 5:02 AM GMT)
முத்துப்பேட்டை அருகே எம்.எல்.ஏ கார் டிரைவர் குளத்தில் மூழ்கி பலியான சம்பவம் தொடர்பாக போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
முத்துப்பேட்டை:
திருவாரூர் மாவட்டம், முத்துப்பேட்டை அருகே உள்ள பண்ணைபுதூர் வடக்கு தெருவைச் சேர்ந்தவர் ஜீவானந்தம் (வயது 35). இவரது மனைவி செந்தமிழ்செல்வி.
இவருக்கு கடந்த 10 நாட்களுக்கு முன்பு ஒரு ஆண் குழந்தை பிறந்தது. ஜீவானந்தம் திருத்துறைப்பூண்டி எம்.எல்.ஏ ஆடலரசனிடம் கார் டிரைவராக பணியாற்றி வந்தார். தனது மனைவிக்கு குழந்தை பிறந்ததால் ஜீவானந்தம் விடுமுறை எடுத்து கொண்டு வீட்டில் இருந்தார்.
நேற்று ஜீவானந்தம் அப்பகுதியில் உள்ள குளத்தில் குளிக்க சென்றார். அவர் நீண்ட நேரமாக வீடு திரும்பாததால் அவரை தேடி உறவினர்கள் சென்றனர். அப்போது அவர் குளத்தில் மூழ்கி இறந்து விட்டது தெரியவந்தது.
இதுபற்றி எடையூர் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அதன்பேரில் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று ஜீவானந்தம் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக திருத்துறைப்பூண்டி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இதுதொடர்பாக வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
குழந்தை பிறந்த 10 நாட்களில் தந்தை இறந்த சம்பவம் அப்பகுதி மக்களை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.
திருவாரூர் மாவட்டம், முத்துப்பேட்டை அருகே உள்ள பண்ணைபுதூர் வடக்கு தெருவைச் சேர்ந்தவர் ஜீவானந்தம் (வயது 35). இவரது மனைவி செந்தமிழ்செல்வி.
இவருக்கு கடந்த 10 நாட்களுக்கு முன்பு ஒரு ஆண் குழந்தை பிறந்தது. ஜீவானந்தம் திருத்துறைப்பூண்டி எம்.எல்.ஏ ஆடலரசனிடம் கார் டிரைவராக பணியாற்றி வந்தார். தனது மனைவிக்கு குழந்தை பிறந்ததால் ஜீவானந்தம் விடுமுறை எடுத்து கொண்டு வீட்டில் இருந்தார்.
நேற்று ஜீவானந்தம் அப்பகுதியில் உள்ள குளத்தில் குளிக்க சென்றார். அவர் நீண்ட நேரமாக வீடு திரும்பாததால் அவரை தேடி உறவினர்கள் சென்றனர். அப்போது அவர் குளத்தில் மூழ்கி இறந்து விட்டது தெரியவந்தது.
இதுபற்றி எடையூர் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அதன்பேரில் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று ஜீவானந்தம் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக திருத்துறைப்பூண்டி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இதுதொடர்பாக வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
குழந்தை பிறந்த 10 நாட்களில் தந்தை இறந்த சம்பவம் அப்பகுதி மக்களை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X