search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    மாணவன் பலியான வழக்கில் இழப்பீடு வழங்காத அரசு பஸ் ஜப்தி
    X

    மாணவன் பலியான வழக்கில் இழப்பீடு வழங்காத அரசு பஸ் ஜப்தி

    அரசு பஸ் மோதி பள்ளி மாணவன் பலியான வழக்கில் இழப்பீட்டு தொகை செலுத்தாததால் சேலம் கோட்டம் அரசு பஸ் ஜப்தி செய்யப்பட்டது.
    வாணியம்பாடி:

    வாணியம்பாடி அடுத்த சின்னவேப்பம்பட்டு பகுதியை சேர்ந்தவர் திருப்பதி (வயது 14). புதூரில் உள்ள தனியார் மேல்நிலைப்பள்ளியில் 10-ம் வகுப்பு படித்து வந்தான்.

    கடந்த 2008-ம் ஆண்டு மாலை பள்ளியிலிருந்து புறப்பட்டு சைக்கிளில் வீட்டிற்கு சென்றுக் கொண்டிருந்தார்.

    அப்போது திருப்பத்தூரிலிருந்து வேலூர் நோக்கி வேகமாக சென்ற அரசு பஸ் சைக்கிள் மீது மோதியதால் மாணவன் படுகாயம் அடைந்தார். பின்னர் வேலூர் அரசு ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டு அங்கு சிகிச்சை பெற்ற வந்த நிலையில் சில நாட்களில் பரிதாபமாக இறந்தார்.

    இதுதொடர்பாக இறந்த மாணவனின் தந்தை சாமு என்கிற முருகேசன் வாணியம்பாடி கோர்ட்டில் இழப்பீட்டுத்தொகை வழங்ககோரி மனு தாக்கல் செய்திருந்தார். இந்த வழக்கில் விசாரணை மேற்கொண்டு இறந்த மாணவனுக்கு இழப்பீட்டுத்தொகை வழங்க கோர்ட்டு உத்தரவிட்டது.

    இதுவரையில் 4 லட்சத்து 4 ஆயிரத்து 117 ரூபாயை சேலம் கோட்டம் அரசு போக்குவரத்து கழகம் வழங்காமல் இருந்து வந்தது.

    இதுகுறித்து முருகேசன் வாணியம்பாடி கோர்ட்டில் மீண்டும் மனு செய்தார். மனுவை விசாரித்த நீதிபதி ராமசந்திரன் இழப்பீட்டுத் தொகை வழங்காததால் அரசு பஸ்சை ஜப்தி செய்ய உத்தரவிட்டார். அதன்படி வாணியம்பாடி பஸ் நிலைத்திற்கு வந்த சேலம் கோட்டம் அரசு பஸ்சை கோர்ட்டு பணியாளர்கள், வக்கீல் குணசேகரன் முன்னிலையில் ஜப்தி செய்தனர். #tamilnews
    Next Story
    ×