search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    பெற்றோர் திட்டியதால் பள்ளி மாணவன் மாயம்
    X

    பெற்றோர் திட்டியதால் பள்ளி மாணவன் மாயம்

    சங்கரன்கோவிலில் பெற்றோர் திட்டியதால் பள்ளி மாணவன் மாயமானது குறித்து போலீசில் புகார் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    சங்கரன்கோவில்:

    சங்கரன்கோவில் தாலுகா கலிங்கப்பட்டியை சேர்ந்தவர் கனகராஜ் மனைவி மஞ்சுளா (வயது 40). இவர்களது மகன் முத்துராஜ் (வயது 15).

    இவன் கலிங்கப்பட்டி அரசு பள்ளியில் 10-ம் வகுப்பு படித்து வருகிறான். முத்துராஜ் படிப்பில் சரியாக கவனம் செலுத்தவில்லை என கூறப்படுகிறது. இதை பெற்றோர் கண்டித்துள்ளனர். மேலும் நடந்து முடிந்த காலாண்டு தேர்வையும் சரியாக எழுதவில்லையாம். தேர்விலும் 4 பாடங்களில் தேர்ச்சி பெறவில்லை என கூறப்படுகிறது.

    இந்நிலையில் 4-ந் தேதி பள்ளிக்கு செல்கிறேன் என கூறி சென்றவன் பின்னர் இரவு வரை வீடு திரும்பவில்லை. பல இடங்களில் தேடியும் கிடைக்கவில்லை.

    இது குறித்து கரிவலம்வந்தநல்லூர் போலீசில் புகார் செய்யப்பட்டது. புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து மாணவன் முத்துராஜை தேடி வருகின்றனர்.

    Next Story
    ×