search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கிருமாம்பாக்கத்தில் கார், மோட்டார் சைக்கிள் திருடிய 3 பேர் கைது
    X

    கிருமாம்பாக்கத்தில் கார், மோட்டார் சைக்கிள் திருடிய 3 பேர் கைது

    கிருமாம்பாக்கத்தில் கார், மோட்டார் சைக்கிள் திருடிய 3 வாலிபர்களை போலீசார் கைது செய்தனர்.

    பாகூர்:

    கிருமாம்பாக்கத்தை சேர்ந்தவர் முத்துகிருஷ்ணன் (வயது 47) இவரது வீட்டில் 3 பேர் திருட்டில் ஈடுபடுவதாக கிருமாம் பாக்கம் போலீசாருக்கு தகவல் கொடுத்தனர்.

    அதன் பேரில் போலீசார் விரைந்து சென்று கொள்ளை முயற்சியில் ஈடு பட்டவர்களை பிடித்தனர்.

    மேலும் அவர்கள் வீட்டை உடைக்க பயன்படுத்திய சுத்தியல் உள்ளிட்ட பொருட் களை பறிமுதல் செய்தனர்.

    பாகூர் இன்ஸ்பெக்டர் கவுதம் சிவகணேஷ், கிரு மாம்பாக்கம் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் தன் வந்திரி ஆகியோர் அவர்களிடம் விசாரணை நடத்தினர்.

    விசாரணையில் அவர் கள் விருத்தாசலத்தை சேர்ந்த அருண்பாண்டியன் (17), மற்றொருவர் வழுதாவூர் திருவள்ளுவர் நகர் விஜிநாத் (24) என்பது தெரிய வந்தது.

    மேலும் இவர்கள் பிள்ளை யார் குப்பம் பகுதியில் சில நாட்களுக்கு முன்பு கார் திருடியதையும்,நேற்று முன்தினம் மோட்டார் சைக்கிள் திருடியதையும் ஒப்புக்கொண்டனர்.மேலும் இவர்கள் சில வீட்டில் திருட முயன்றதும் தெரிய வந்தது.

    இவர்களுடன் திருடிய மற்றொருவர் விருதாசலத்தை அடுத்த கருவேப்பிலங்குறிச்சியை சேர்ந்த சிவசங்கர் (24) என்பதும், இவரை தேடி வந்த நிலையில் இவரும் போலீசாரிடம் சிக்கினார். அவர்கள் திருடிய கார், மோட்டார் சைக்கிளை விருத்தாசலத்தில் பதுக்கி வைத்தனர். இவற்றை போலீசார் பறிமுதல் செய்த னர்.

    மேலும் 3 பேரையும் கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். இவற்றை பறிமுதல் செய்த கிருமாம்பாக்கம் குற்றப்பிரிவு போலீசார் சிவக்குமார், ரஞ்சித்குமார், ஜெயக்குமார் மற்றும் போலீசாரை எஸ்.பி. ரகீம் பாராட்டினார்.

    Next Story
    ×