search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கணவர் தற்கொலை செய்து இறந்த வேதனையால் மனைவியும் தூக்கு போட்டு மரணம்
    X

    கணவர் தற்கொலை செய்து இறந்த வேதனையால் மனைவியும் தூக்கு போட்டு மரணம்

    பெங்களூருவில் கணவர் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்ட வேதனையில் மனைவியும் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
    ஓசூர்:

    பெங்களூரு, பேட்ராயன் புரா பகுதியில் உள்ள கஸ்தூரிபா நகரை சேர்ந்தவர் ஹரீஷ். இவரது மனைவி ஷில்பா(29). ஹரீஷ், ஆட்டோமொபைல் கடையில் வேலை செய்து வந்தார். 8 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் முடித்த இத்தம்பதியர்க்கு, ஒரு மகள் உள்ளார்.

    இந்நிலையில், ஹரீசுக்கு அவரது நண்பரின் மனைவியுடன் கள்ளத் தொடர்பு ஏற்பட்டது. இதுசம்பந்தமாக இரு குடும்பத்திலும் பிரச்சினை ஏற்பட்டு, காவல் நிலையம் வரை புகார் சென்றது. இதையடுத்து போலீசார் ஹரீஷ் மற்றும் நண்பரின் மனைவியை அழைத்து அறிவுரை வழங்கி அனுப்பினர்.

    இந்த விவகாரத்தால் ஆத்திரமடைந்த ஹரீசின் நண்பர், அவருக்கு மிரட்டல் விடுத்தார். இதனால் பயந்து போன ஹரீஷ், கடந்த திங்கட்கிழமை மாலை வி‌ஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார்.

    இதனால் வேதனையடைந்த அவரது மனைவி ஷில்பா, நேற்று, ஹரீசின் திதிக்கு ஏற்பாடு செய்யும் வேளையில், வீட்டில் உள்ள அறைக்கு சென்று தூக்கு மாட்டி தற்கொலை செய்துகொண்டதாக, பேட்டராயபுரா போலீசார் தெரிவித்தனர். #tamilnews
    Next Story
    ×