search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    உசிலம்பட்டியில் பெண் துப்புரவு தொழிலாளியிடம் ரூ.1.32 லட்சம் மோசடி
    X

    உசிலம்பட்டியில் பெண் துப்புரவு தொழிலாளியிடம் ரூ.1.32 லட்சம் மோசடி

    உசிலம்பட்டியில் பெண் துப்புரவு தொழிலாளியிடம் ரூ.1.32 லட்சம் மோசடி செய்த வரை போலீசார் கைது செய்தனர்.

    மதுரை:

    உசிலம்பட்டி ஆனந்தா நகரைச் சேர்ந்த முனியாண்டி மனைவி நாகம்மாள் (வயது 48). துப்புரவு தொழிலாளி.

    இவரது பக்கத்து ஊரைச் சேர்ந்த விருமாண்டி (59) என்பவரிடம் கடந்த ஆண்டு குடும்ப செலவுக்காக ரூ.1 லட்சம் கடன் கேட்டார். இதற்கு விருமாண்டி தயங்கினார்.

    அப்போது நாகம்மாள் ஏ.டி.எம். கார்டை தருகிறேன். அதில் இருந்து மாதந்தோறும் வட்டிப்பணம் ரூ.5 ஆயிரத்தை எடுத்துக் கொள்ளுங்கள் என்று கூறியுள்ளார்.

    இதையடுத்து விருமாண்டி உசிலம்பட்டி பஸ் நிலையம் வந்து நாகம்மாளிடம் ரூ.1 லட்சம் பணத்தை கொடுத்துவிட்டு ஏ.டி.எம். கார்டை வாங்கிச் சென்றார்.

    சமீபத்தில் நாகம்மாள் ரூ. 1 லட்சம் அசலை திருப்பி கட்டிவிட்டு ஏ.டி.எம். கார்டை பெற்றார். அதன் பிறகு ஏ.டி.எம். கார்டில் பண இருப்பை சோதித்து பார்த்தபோது விருமாண்டி ரூ.1.32 லட்சம் பணத்தை கூடுதலாக எடுத்தது தெரிய வந்தது.

    இது குறித்து நாகம்மாள் உசிலம்பட்டி டவுன் போலீசில் புகார் செய்தார். டி.எஸ்.பி. கல்யாண்குமார் வழக்குப்பதிவு செய்து விருமாண்டியை கைது செய்தார். இதில் தொடர்புடைய அவரது மருமகள் சுபா (35) தப்பி ஓடி விட்டார். அவரை போலீசார் தேடி வருகின்றனர்.

    Next Story
    ×