search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    திருச்சி வந்த மத்திய மந்திரி பிரகாஷ் ஜவடேகருக்கு விமான நிலையத்தில் பா.ஜ.க. சார்பில் வரவேற்பு அளிக்கப்பட்டது.
    X
    திருச்சி வந்த மத்திய மந்திரி பிரகாஷ் ஜவடேகருக்கு விமான நிலையத்தில் பா.ஜ.க. சார்பில் வரவேற்பு அளிக்கப்பட்டது.

    காங்கிரசை விட பிரதமர் மோடி இருமடங்கு கூடுதல் திட்டங்களை நிறைவேற்றியுள்ளார்- பிரகாஷ் ஜவடேகர்

    காங்கிரஸ் ஆட்சியில் நிறைவேற்றப்பட்ட திட்டங்களை விட, மோடி ஆட்சியில் 2 மடங்கு திட்டங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளதாக மத்திய மந்திரி பிரகாஷ் ஜவடேகர் தெரிவித்துள்ளார். #PrakashJavadekar #PMModi #congress
    திருச்சி:

    திருச்சி தூய வளனார் கல்லூரியின் 175-வது ஆண்டு விழா மற்றும் திருச்சி என்.ஐ.டி.யில் உற்பத்தி மையம் திறப்பு விழா இன்று நடைபெற்றது.

    இதில் பங்கேற்க மத்திய மனிதவள மேம்பாட்டுத்துறை அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் இன்று காலை திருச்சி வந்தார். திருச்சி விமான நிலையத்தில் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-

    திருச்சியில் நடைபெறும் முக்கியமான நிகழ்ச்சியில் பங்கேற்பதற்காக இங்கு வந்துள்ளேன். திருச்சி தேசிய தொழில்நுட்ப வளாகத்தில் (என்.ஐ.டி.) இந்தியாவிலேயே முதன் முறையாக ரூ.190 கோடியில் உயர் ஆய்வு மையம் அமைக்கப்பட்டுள்ளது.

    ஒரே வளாகத்தில் 13 ஆய்வக கூடங்கள் அமைக்கப்பட்டுள்ளது சிறப்பாகும். இது என்ஜினீயரிங் கல்வி மேம்பாட்டுக்காக மட்டுமல்லாது, தொழிற்சாலை திறன் மேம்பாட்டையும் ஊக்குவிக்கும்.

    இதைத் தொடர்ந்து திருச்சி ஜோசப் கல்லூரி 150-வது ஆண்டு விழாவிலும் பங்கேற்கிறேன். மத்திய நரேந்திர மோடி அரசு அனைத்து துறைகளிலும் சிறப்பு மிக்க சாதனை செய்துள்ளது. இதற்கு முன்பு இருந்த ஆட்சியில் நிறைவேற்றப்பட்ட திட்டங்களை விட, மோடி ஆட்சியில் 2 மடங்கு திட்டங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளன.


    பொது மக்களுக்கு தேவையான குடிநீர், மின்சாரம், கழிப்பிடம் உள்ளிட்ட அடிப்படை வசதிகள், கியாஸ் இணைப்பு உள்ளிட்ட திட்டங்கள் முன்பு இருந்ததை விட கடந்த 4 ஆண்டுகளில் 2 மடங்கு கூடுதலாக நிறைவேற்றப்பட்டுள்ளது.

    தற்போது பெட்ரோல்- டீசல் விலை ரூ.5 வரை குறைக்கப்பட்டுள்ளது பொதுமக்களுக்கு மிகப்பெரிய மகிழ்ச்சியை கொடுத்துள்ளது. ஏற்கனவே மத்திய அரசு ஒரு லிட்டருக்கு ரூ.2.50 பைசா குறைத்துள்ளது. பாரதிய ஜனதா ஆளும் 13 மாநிலங்களில் அந்த மாநில அரசுகளும் லிட்டருக்கு ரூ.2.50 பைசா குறைத்துள்ளது. இதன் மூலம் ரூ.5 குறைந்ததால் மக்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர். மத்தியில் நரேந்திர மோடி தலைமையிலான பா.ஜனதா அரசு சிறப்பு வாய்ந்த சாதனைகளை செய்துள்ளது.

    இவ்வாறு அவர் கூறினார். #BJP #PrakashJavadekar #PMModi #Congress
    Next Story
    ×