search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடு 10-ந்தேதி பொள்ளாச்சி வருகை
    X

    துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடு 10-ந்தேதி பொள்ளாச்சி வருகை

    பொள்ளாச்சி மகாலிங்கம் கல்லூரியின் வைரவிழா நிறைவையொட்டி வெங்கையா நாயுடு கலந்து கொள்ள உள்ளார். இதற்காக 10-ந்தேதி விமானம் மூலம் காலை வருகிறார். #VenkaiahNaidu

    பொள்ளாச்சி:

    கோவை மாவட்டம் பொள்ளாச்சி மகாலிங்கம் கல்லூரியின் வைரவிழா நிறைவையொட்டி துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடு கலந்து கொள்ள உள்ளார். இதற்காக 10-ந்தேதி விமானம் மூலம் காலை வருகிறார்.

    10-ந்தேதி கோவை விமான நிலையத்தில் இருந்து வெங்கையா நாயுடு ஹெலிகாப்டர் மூலம் மகாலிங்கம் கல்லூரிக்கு செல்கிறார். அவரது வருகையொட்டி கல்லூரி வளாகத்தில் 3 ஹெலி பேடுகள் அமைக்கப்பட்டு வருகிறது. 

    நிகழ்ச்சியில் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி, என்.ஐ.ஏ. கல்வி நிறுவனங்களின் தலைவர் டாக்டர் மாணிக்கம், துணைத்தலைவர் பால சுப்பிர மணியம், தாளாளர் ஹரிஹரசுதன், மதிப்பியல் தலைவர் க. பாலசுப்பிரமணியன் உள்பட பலர் கலந்து கொள்ள உள்ளனர்.

    ஹெல்பேடு அமைக்கும் பணியை போலீஸ் சூப்பிரண்டு பாண்டியராஜன் இன்று பார்வையிட்டு ஆய்வு செய்தார். மேலும் துணை ஜனாதிபதி பேசும் மேடை, வரும்பாதை ஆகிய இடங்களின் பாதுகாப்பு குறித்து இன்று சோதனை நடத்தினார்.  #VenkaiahNaidu

    Next Story
    ×