என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
கந்தர்வகோட்டை அருகே பஸ் படிக்கட்டில் இருந்து தவறி விழுந்த வாலிபர் பலி
Byமாலை மலர்4 Oct 2018 4:58 PM GMT (Updated: 4 Oct 2018 4:58 PM GMT)
கந்தர்வகோட்டை அருகே பஸ் படிக்கட்டில் இருந்து தவறி விழுந்த வாலிபர் பரிதாபமாக இறந்தார்.
கந்தர்வகோட்டை:
புதுக்கோட்டை மாவட்டம், கந்தர்வகோட்டை மருத்துவர் நகர் பகுதியை சேர்ந்தவர் குமார். இவரது மகன் கார்த்தி(வயது 18). இவர் பிளஸ்-2 வரை படித்து முடித்து விட்டு, தஞ்சாவூரில் உள்ள ஒரு செல்போன் கடையில் ஊழியராக வேலை பார்த்து வந்தார். இவர் தினமும் வேலைக்கு கந்தர்வகோட்டையில் இருந்து தஞ்சாவூருக்கு பஸ்சில் சென்று வருவது வழக்கம். அதேபோல நேற்றும் ஒரு அரசு பஸ்சில் கந்தர்வகோட்டையில் இருந்து தஞ்சாவூருக்கு சென்று கொண்டிருந்தார். பஸ்சில் கூட்டம் அதிகமாக இருந்ததால் கார்த்தி பஸ்சின் படிக்கட்டில் நின்று கொண்டு பயணம் செய்ததாக கூறப்படுகிறது.
இந்தநிலையில் கந்தர்வகோட்டை அருகே உள்ள சுங்கச்சாவடி அருகே வேகத் தடையில் பஸ் ஏறி இறங்கியபோது, பஸ்சின் படிக்கட்டில் நின்ற கார்த்திக் தவறி கீழே விழுந்து படுகாயமடைந்தார். இதைக்கண்ட அங்கிருந்தவர்கள் படுகாயமடைந்த கார்த்தியை மீட்டு சிகிச்சைக்காக தஞ்சாவூர் மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். ஆனால் மருத்துவமனைக்கு செல்லும் வழியிலேயே அவர் பரிதாபமாக இறந்தார். இந்த விபத்து குறித்து கந்தர்வகோட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்து, அரசு பஸ் டிரைவர் செல்லத்துரையை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
புதுக்கோட்டை மாவட்டம், கந்தர்வகோட்டை மருத்துவர் நகர் பகுதியை சேர்ந்தவர் குமார். இவரது மகன் கார்த்தி(வயது 18). இவர் பிளஸ்-2 வரை படித்து முடித்து விட்டு, தஞ்சாவூரில் உள்ள ஒரு செல்போன் கடையில் ஊழியராக வேலை பார்த்து வந்தார். இவர் தினமும் வேலைக்கு கந்தர்வகோட்டையில் இருந்து தஞ்சாவூருக்கு பஸ்சில் சென்று வருவது வழக்கம். அதேபோல நேற்றும் ஒரு அரசு பஸ்சில் கந்தர்வகோட்டையில் இருந்து தஞ்சாவூருக்கு சென்று கொண்டிருந்தார். பஸ்சில் கூட்டம் அதிகமாக இருந்ததால் கார்த்தி பஸ்சின் படிக்கட்டில் நின்று கொண்டு பயணம் செய்ததாக கூறப்படுகிறது.
இந்தநிலையில் கந்தர்வகோட்டை அருகே உள்ள சுங்கச்சாவடி அருகே வேகத் தடையில் பஸ் ஏறி இறங்கியபோது, பஸ்சின் படிக்கட்டில் நின்ற கார்த்திக் தவறி கீழே விழுந்து படுகாயமடைந்தார். இதைக்கண்ட அங்கிருந்தவர்கள் படுகாயமடைந்த கார்த்தியை மீட்டு சிகிச்சைக்காக தஞ்சாவூர் மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். ஆனால் மருத்துவமனைக்கு செல்லும் வழியிலேயே அவர் பரிதாபமாக இறந்தார். இந்த விபத்து குறித்து கந்தர்வகோட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்து, அரசு பஸ் டிரைவர் செல்லத்துரையை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X