search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    மாணவிகளை கிண்டல் செய்த வாலிபர்கள் கைது
    X

    மாணவிகளை கிண்டல் செய்த வாலிபர்கள் கைது

    திருச்சியில் கல்லூரி மாணவிகளை கிண்டல் செய்த வாலிபர்களை போலீசார் கைது செய்தனர்.
    திருச்சி:

    திருச்சி மலைக்கோட்டை சங்கரன் பிள்ளை ரோடு பகுதியில் மார்க்கெட் உள்ளது. இந்த பகுதியில் நடந்து செல்லும் கல்லூரி மாணவிகளை ஒரு வாலிபர் கிண்டல் செய்தார். இது குறித்து அப்பகுதி மக்கள் மலைக்கோட்டை போலீசுக்கு தகவல் கொடுத்தனர். உடனே போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் அம்சவள்ளி சம்பவ இடத்திற்கு விரைந்து மாணவிகளை கிண்டல் செய்த வாலிபரை மடக்கி பிடித்தனர். 

    இதைப் போல் அதே பகுதியில் உள்ள ஒரு கல்லூரி முன்பு நின்று மாணவிகளை கிண்டல் செய்த வாலிபரையும் போலீசார் மடக்கி பிடித்தனர். விசாரணையில் அவர்கள் மண்ணச்சநல்லூரை சேர்ந்த குணசேகரன் (வயது21), ஸ்ரீரங்கத்தை சேர்ந்த வடிவேல்(20) என்பது தெரியவந்தது. தொடர்ந்து அவர்களிடம் விசாரணை நடந்து வருகிறது.
    Next Story
    ×