search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    தேவாரம் அருகே மின்சாரம் தாக்கி கூலி தொழிலாளி பலி
    X

    தேவாரம் அருகே மின்சாரம் தாக்கி கூலி தொழிலாளி பலி

    தேவாரம் அருகே தண்ணீர் பிடிக்க மோட்டாரை இயக்கிய கூலித்தொழிலாளி மின்சாரம் தாக்கி பரிதாபமாக இறந்தார்.
    தேனி:

    தேவாரம் அருகே தம்மிநாயக்கன்பட்டி காளியம்மன் கோவில் தெருவைச் சேர்ந்தவர் நீதிபதி (வயது 43). இவர் கூலி தொழிலாளி.

    சம்பவத்தன்று தனது வீட்டில் குடிநீர் பிடிப்பதற்காக மோட்டாரை இயக்க முயன்றார். அப்போது எதிர்பாராத விதமாக நீதிபதி மின்சாரம் தாக்கி தூக்கி வீசப்பட்டார். இதை பார்த்த உறவினர் மற்றும் அக்கம் பக்கத்தினர் நீதிபதியை மீட்டு உத்தமபாளையம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். ஆனால் சிகிச்சை பலனின்றி நீதிபதி பரிதாபமாக உயிரிழந்தார்.

    இது குறித்து அவரது அண்ணன் விஜயராஜ் தேவாரம் போலீசில் புகார் அளித்தார். இந்த புகாரின் பேரில் தேவாரம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
    Next Story
    ×