search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    காதலன் வீட்டார் எதிர்ப்பு- வேலூர் கல்லூரி மாணவி தற்கொலை
    X

    காதலன் வீட்டார் எதிர்ப்பு- வேலூர் கல்லூரி மாணவி தற்கொலை

    ஆரணியில் காதலன் வீட்டார் எதிர்த்ததால் கல்லூரி மாணவி வி‌ஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார்.

    ஆரணி:

    ஆரணி சைதாப்பேட்டை பகுதியை சேர்ந்த ஆட்டோ டிரைவர் சரவணன் மகள் ஷாலினி (வயது 18). வேலூர் சாய்நாதபுரத்தில் உள்ள தனியார் கல்லூரியில் பி.காம். 2-ம் ஆண்டு படித்து வந்தார்.

    ஷாலினியும், ஆரணி பாரதியார் தெருவை சேர்ந்த நகை அடகுகடை வியாபாரி பூபதி மகன் அருண் (20) என்பவரும் 2 ஆண்டுகளாக காதலித்து வந்தனர்.

    இவர்களின் காதலுக்கு காதலன் வீட்டார் எதிர்ப்பு தெரிவித்தனர். இதையடுத்து, ஷாலினியிடம் பேசுவதை காதலன் அருண் தவிர்த்தார். இதனால் மனமுடைந்த ஷாலினி நேற்றிரவு வி‌ஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார்.

    பெற்றோர் மகளின் உடலை மீட்டு விஷாரத்தில் உள்ள தனியார் ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். மாணவி இறந்து விட்டதை டாக்டர்கள் உறுதி செய்தனர்.

    இதையடுத்து, பிரேத பரிசோதனைக்காக மாணவி உடல் ஆரணி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கப்பட்டது. இது குறித்து, ஆரணி டவுன் போலீசார் வழக்குப்பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    Next Story
    ×