search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    வெம்பாக்கம் அருகே கார் மோதி முதியவர் பலி
    X

    வெம்பாக்கம் அருகே கார் மோதி முதியவர் பலி

    வெம்பாக்கம் அருகே நடந்து சென்ற முதியவர் மீது கார் மோதியது. இதில் தூக்கி வீசப்பட்ட அவர் பலத்த காயம் அடைந்து இறந்தார்.

    வெம்பாக்கம்:

    வெம்பாக்கம் அருகே உள்ள கூழபந்தல் பகுதியை சேர்ந்தவர் ஏழுமலை (வயது 78). விவசாயி. இவர் நேற்று மாலை அதே பகுதியில் நடந்து சென்று கொண்டிருந்தார்.

    அப்போது காஞ்சிபுரத்தில் இருந்து வந்தவாசி நோக்கி சென்ற கார் ஏழுமலை மீது மோதியது. இதில் அவர் தூக்கிவீசபட்டு பலத்த காயமடைந்தார்.

    அவரை மீட்ட அப்பகுதியினர் காஞ்சிபுரம் அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர் .

    அங்கு ஏழுமலை சிகிச்சைபலனின்றி இறந்தார். இது குறித்து தூசி போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    Next Story
    ×