என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
அபிராமபுரத்தில் பட்டாக்கத்திகளுடன் காரில் சுற்றிய 4 வாலிபர்கள் கைது
சென்னை:
அபிராமபுரம் போலீசார் நேற்று இரவு ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது வாகன சோதனையும் நடத்தப்பட்டது. ஒரு காரை மடக்கி சோதனை செய்தனர்.
அதில் 4 வாலிபர்கள் இருந்தனர். அவர்களது பெயர் பாலமுருகன், ஸ்டீபன், ராகுல், சேகர் என்பது தெரியவந்தது.
பாலமுருகன் தனியார் கல்லூரியில் படித்து வருகிறார். இவர்களிடம் விசாரித்த போது முன்னுக்கு பின் முரணாக பேசினர். இதனை தொடர்ந்து காரில் சோதனை நடத்தினர். அதில் 2 பெரிய பட்டாக்கத்திகள் இருந்தன. அவைகளை போலீசார் பறிமுதல் செய்தனர்.
100 கிராம் மதிப்பிலான கஞ்சா பொட்டலங்களும் காரில் இருந்து கைப்பற்றப்பட்டது. இதனையடுத்து பிடிபட்ட 4 பேரிடமும் தீவிர விசாரணை நடக்கிறது. 4 பேரும் கத்தியுடன் காரில் சுற்றியது ஏன்? என்பது பற்றி விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.
கஞ்சா பொட்டலங்களை 4 பேரும் எங்கிருந்து வாங்கினார்கள் என்பது பற்றி விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்