search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கருணாசுடன் திமுக எம்எல்ஏ ஜெ.அன்பழகன் சந்திப்பு
    X

    கருணாசுடன் திமுக எம்எல்ஏ ஜெ.அன்பழகன் சந்திப்பு

    சென்னை வடபழனி சூர்யா ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்ட கருணாசை தி.மு.க. எம்.எல்.ஏ. ஜெ.அன்பழகன் இன்று சந்தித்து பேசினார். #Karunas #JAnbazhagan
    சென்னை:

    வடபழனி சூர்யா ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்ட கருணாசை தி.மு.க. எம்.எல்.ஏ. ஜெ.அன்பழகன் இன்று சந்தித்து பேசினார்.

    பின்னர் ஜெ.அன்பழகன் நிருபர்களிடம் கூறியதாவது:-

    சட்டமன்ற உறுப்பினர் கருணாஸ் ஐ.சி.யு. வார்டில் அனுமதிக்கப்பட்டுள்ளர். அவருக்கு அளிக்கப்பட்டு வரும் சிகிச்சை பற்றி கேட்டறிந்தேன்.

    டி.டி.வி.தினகரனுக்கு ஆதரவாக கருணாஸ் செயல்படுவதாக நினைத்து பழைய வழக்குகளை தோண்டி எடுக்கிறார்கள். அவருக்கு சபாநாயகர் விளக்கம் கேட்டு நோட்டீசு அனுப்ப உள்ளதாக பத்திரிகை, தொலைக்காட்சியில் பார்த்தேன்.

    ஏற்கனவே 18 எம்.எல்.ஏ.க்கள் மீது நடவடிக்கை எடுத்து அந்த தகுதி நீக்க வழக்கில் இன்னும் தீர்ப்பு வராமல் 3-வது நீதிபதியிடம் சென்றுள்ளது.

    இதில் ஏற்கனவே சபாநாயகரின் தீர்ப்பு தவறு என்று ஒரு நீதிபதி கூறி உள்ளார். மற்றொரு நீதிபதி ‘சரி’ என்று சொல்லி உள்ளார்.


    ஆகவே சபாநாயகரின் தீர்ப்பு சரிசமமாகத்தான் இருக்கிறதே தவிர நியாயமாக தீர்ப்பு சொன்னதாக யாரும் சொல்லவில்லை. 3-வது நீதிபதி தீர்ப்புக்காக எல்லோரும் காத்திருக்கிறோம்.

    இந்த 3-வது நீதிபதியும் சபாநாயகரின் தீர்ப்பு செல்லாது என்று சொல்லிவிட்டால் சபாநாயகர் எந்த முகத்தை வைத்துக் கொண்டு இவர்கள் மீது நடவடிக்கை எடுப்பார்?

    எனவே நடவடிக்கை எடுப்பதற்கு முன்பு சபாநாயகர் கொஞ்சம் அமைதியாக இருந்து 3-வது நீதிபதியின் தீர்ப்பை பார்த்து விட்டு அவருக்கு அதிகாரம் இருக்கிறதா? இல் லையா? என்பதை தெரிந்து கொண்டு செயல்பட வேண்டும்.

    இந்த ஆட்சி முடியும் தருவாய்க்கு வந்து விட்டது. ஒரு நோயாளி ஆஸ்பத்திரியில் முடியாமல் இருக்கும் போது மூச்சை இழுத்து இழுத்து விடுவான். இதை பார்ப்பவர்கள் நல்லா மூச்சு விடுகிறான் என்பார்கள். அது நிற்பதற்கான மூச்சு தானே தவிர நல்லா மூச்சுவிடுவதாக அர்த்தமில்லை.

    அதுபோல் இந்த ஆட்சி முடியும் நேரத்தில் ஆட்சியாளர்கள் சர்வாதிகார உச்சிக்கு செல்கிறார்கள். இது நீடிக்காது. இந்த ஆட்சி நீதிமன்றத்தின் மூலமாகவும், மக்கள் மன்றத்தின் மூலமாகவும் தூக்கி எறியப்படும்.

    இவ்வாறு அவர் கூறினார். #Karunas #JAnbazhagan
    Next Story
    ×