என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
திருச்சியில் ரெயில்வே கூட்டுறவு சங்க தேர்தல் வாக்குப்பதிவு
Byமாலை மலர்2 Oct 2018 6:27 PM GMT (Updated: 2 Oct 2018 6:27 PM GMT)
திருச்சியில் ரெயில்வே கூட்டுறவு சங்க தேர்தல் வாக்குப்பதிவு பலத்த போலீஸ் பாதுகாப்புடன் நடந்தது.
திருச்சி:
திருச்சி ரெயில்வே கூட்டுறவு நாணய சங்கத்தில் 19 இயக்குனர்கள் பதவிக்கான தேர்தல் நேற்று தொடங்கி 10 கட்டங்களாக தெற்கு ரெயில்வே முழுவதும் நடக்கிறது. தேர்தல் பார்வையாளராக ஓய்வுபெற்ற ஐகோர்ட்டு நீதிபதி சிவசுப்பிரமணியன் நியமிக்கப்பட்டுள்ளார். திருச்சியில் பொன்மலை ரெயில்வே பணிமனை உள்பட 42 இடங்களில் வாக்குப்பதிவு நேற்று நடந்தது. இதில் ரெயில்வே கூட்டுறவு சங்கத்தில் உறுப்பினராக உள்ள ரெயில்வே ஊழியர்கள் வாக்களித்தனர்.
வாக்குப்பதிவு காலை 8 மணிக்கு தொடங்கி மாலை 5 மணி வரை நடந்தது. தேர்தலையொட்டி வாக்குப்பதிவு நடந்த மையங்கள் முன்பு மாநகர போலீசார், ரெயில்வே பாதுகாப்பு படையினர், ரெயில்வே போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர். பொதுத்தேர்தல்களை போல ரெயில்வே கூட்டுறவு சங்க தேர்தல் நடந்தது.
வாக்குப்பதிவு முடிந்ததும் வாக்குப்பெட்டிகள் ‘சீல்’ வைக்கப்பட்டு பலத்த போலீஸ் பாதுகாப்புடன் திருச்சி அரிஸ்டோ ரவுண்டானா அருகே உள்ள ரெயில்வே கூட்டுறவு சங்க அலுவலகத்திற்கு கொண்டு வரப்பட்டன. அங்கு வாக்குப்பெட்டிகள் பாதுகாப்பான அறையில் வைக்கப்பட்டு போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டது. தொடர்ந்து நாளை (புதன்கிழமை) தஞ்சாவூர், திருவாரூர், மயிலாடுதுறை உள்ளிட்ட இடங்களில் வாக்குப்பதிவு நடைபெற உள்ளது.
இதேபோல் சென்னை, மதுரை, சேலம், பாலக்காடு, திருவனந்தபுரம் ஆகிய கோட்டங்களிலும் வெவ்வேறு நாட்களில் வாக்குப்பதிவு நடைபெறும். வருகிற 9-ந் தேதி வாக்குப்பதிவு முடிவடைகிறது. வருகிற 10-ந்தேதி வாக்கு எண்ணிக்கை நடத்தப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்படுகிறது.
திருச்சி ரெயில்வே கூட்டுறவு நாணய சங்கத்தில் 19 இயக்குனர்கள் பதவிக்கான தேர்தல் நேற்று தொடங்கி 10 கட்டங்களாக தெற்கு ரெயில்வே முழுவதும் நடக்கிறது. தேர்தல் பார்வையாளராக ஓய்வுபெற்ற ஐகோர்ட்டு நீதிபதி சிவசுப்பிரமணியன் நியமிக்கப்பட்டுள்ளார். திருச்சியில் பொன்மலை ரெயில்வே பணிமனை உள்பட 42 இடங்களில் வாக்குப்பதிவு நேற்று நடந்தது. இதில் ரெயில்வே கூட்டுறவு சங்கத்தில் உறுப்பினராக உள்ள ரெயில்வே ஊழியர்கள் வாக்களித்தனர்.
வாக்குப்பதிவு காலை 8 மணிக்கு தொடங்கி மாலை 5 மணி வரை நடந்தது. தேர்தலையொட்டி வாக்குப்பதிவு நடந்த மையங்கள் முன்பு மாநகர போலீசார், ரெயில்வே பாதுகாப்பு படையினர், ரெயில்வே போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர். பொதுத்தேர்தல்களை போல ரெயில்வே கூட்டுறவு சங்க தேர்தல் நடந்தது.
வாக்குப்பதிவு முடிந்ததும் வாக்குப்பெட்டிகள் ‘சீல்’ வைக்கப்பட்டு பலத்த போலீஸ் பாதுகாப்புடன் திருச்சி அரிஸ்டோ ரவுண்டானா அருகே உள்ள ரெயில்வே கூட்டுறவு சங்க அலுவலகத்திற்கு கொண்டு வரப்பட்டன. அங்கு வாக்குப்பெட்டிகள் பாதுகாப்பான அறையில் வைக்கப்பட்டு போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டது. தொடர்ந்து நாளை (புதன்கிழமை) தஞ்சாவூர், திருவாரூர், மயிலாடுதுறை உள்ளிட்ட இடங்களில் வாக்குப்பதிவு நடைபெற உள்ளது.
இதேபோல் சென்னை, மதுரை, சேலம், பாலக்காடு, திருவனந்தபுரம் ஆகிய கோட்டங்களிலும் வெவ்வேறு நாட்களில் வாக்குப்பதிவு நடைபெறும். வருகிற 9-ந் தேதி வாக்குப்பதிவு முடிவடைகிறது. வருகிற 10-ந்தேதி வாக்கு எண்ணிக்கை நடத்தப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்படுகிறது.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X