என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
மதுகுடிப்பதை கண்டித்ததால் ஆலங்குடியில் விவசாயி விஷம் குடித்து தற்கொலை
Byமாலை மலர்2 Oct 2018 1:00 PM GMT (Updated: 2 Oct 2018 1:00 PM GMT)
ஆலங்குடியில் மதுகுடிப்பதை மனைவி கண்டித்ததால் விஷம் கலந்த மதுவை குடித்து விவசாயி தற்கொலை செய்து கொண்டார்.
ஆலங்குடி:
ஆலங்குடி அருகேயுள்ள பனங்குளம் கிராமத்தைச் சேர்ந்தவர் துரைராஜ் (55) விவசாயி. இவர் தினமும் மது குடித்து விட்டு வந்து மனைவியுடன் தகராறில் ஈடுபடுவதாக கூறப்படுகிறது.
இந்நிலையில் சம்பவத்தன்று துரைராஜ் மது அருந்திவிட்டு தனது மனைவியுடன் தகராறில் ஈடுபட்டார். மேலும் மது குடிக்க கூடாது என்று கண்டித்ததாக கூறப்படுகிறது. இதனால் மனமுடைந்த துரைராஜ் மதுவில் விஷம் கலந்து குடித்து மயங்கி கிடந்தார். உடனே அவரை அக்கம் பக்கத்தினர் மீட்டு சிகிச்சைக்காக புதுக்கோட்டை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி துரைராஜ் பரிதாபமாக உயிரிழந்தார். இது குறித்து கீரமங்கலம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகிறார்கள்.
ஆலங்குடி அருகேயுள்ள பாண்டிக்குடியைச் சேர்ந்தவர் செல்வராஜ். இவரது மனைவி அன்புச்செல்வி (27). இவர்களுக்கு குழந்தை இல்லாததால், மருத்துவமனைக்கு சென்று சிகிச்சை பெற்று வந்தனர்.
இந்நிலையில், குழந்தை இல்லாததால், மனமுடைந்த அன்புச்செல்வி நேற்று வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் தூக்குமாட்டி தற்கொலை செய்து கொண்டார். இது குறித்து கீரமங்கலம் போலீசார் விசாரித்து வருகிறார்கள். திருமணம் முடிந்து 9 மாதங்களே ஆனதால் ஆர்.டி.ஓ டெய்சிகுமார் விசாரணை மேற்கொண்டு வருகிறார். #tamilnews
ஆலங்குடி அருகேயுள்ள பனங்குளம் கிராமத்தைச் சேர்ந்தவர் துரைராஜ் (55) விவசாயி. இவர் தினமும் மது குடித்து விட்டு வந்து மனைவியுடன் தகராறில் ஈடுபடுவதாக கூறப்படுகிறது.
இந்நிலையில் சம்பவத்தன்று துரைராஜ் மது அருந்திவிட்டு தனது மனைவியுடன் தகராறில் ஈடுபட்டார். மேலும் மது குடிக்க கூடாது என்று கண்டித்ததாக கூறப்படுகிறது. இதனால் மனமுடைந்த துரைராஜ் மதுவில் விஷம் கலந்து குடித்து மயங்கி கிடந்தார். உடனே அவரை அக்கம் பக்கத்தினர் மீட்டு சிகிச்சைக்காக புதுக்கோட்டை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி துரைராஜ் பரிதாபமாக உயிரிழந்தார். இது குறித்து கீரமங்கலம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகிறார்கள்.
ஆலங்குடி அருகேயுள்ள பாண்டிக்குடியைச் சேர்ந்தவர் செல்வராஜ். இவரது மனைவி அன்புச்செல்வி (27). இவர்களுக்கு குழந்தை இல்லாததால், மருத்துவமனைக்கு சென்று சிகிச்சை பெற்று வந்தனர்.
இந்நிலையில், குழந்தை இல்லாததால், மனமுடைந்த அன்புச்செல்வி நேற்று வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் தூக்குமாட்டி தற்கொலை செய்து கொண்டார். இது குறித்து கீரமங்கலம் போலீசார் விசாரித்து வருகிறார்கள். திருமணம் முடிந்து 9 மாதங்களே ஆனதால் ஆர்.டி.ஓ டெய்சிகுமார் விசாரணை மேற்கொண்டு வருகிறார். #tamilnews
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X