என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
திருவையாறில் ஆற்றில் மூழ்கி மாணவர் பலி
திருவையாறு:
திருவையாறு வடக்குவீதி ராஜா நகரை சேர்ந்த காசிநாதன் மகன் சஞ்சீவ் (வயது 15) 10-ம் வகுப்பு மாணவர்.
இவர் நேற்று மதியம் 3.30 மணிக்கு திருவையாறு 15 மண்டபதெரு கடைசியில் நெல்லிக்காய் படித்துறை குளிக்க சென்றார். 4 மணி அளவில் அவருடன் சென்ற சக மாணவர்கள் சஞ்சீவ் ஆற்றில் மூழ்கி விட்டார் என்று அவரது பெற்றோர்களிடம் தகவல் கொடுத்தனர்.
இதுபற்றி அவர்கள் திருவையாறு காவல் நிலையம் மற்றும் தீயணைப்பு துறையினருக்கும் தகவல் தெரிவித்தனர். அதன் பேரில் திருவையாறு இன்ஸ்பெக்டர் ஸ்ரீதர், சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர்கள் ரவி, கலியபெருமாள் ஆகியோர் விரைந்து வந்தனர். மேலும் தீயணைப்பு வீரர்கள் சந்திரசேகரன், செல்வராஜ், முத்துகுமார், வெங்கடேசன், பிரபாகரன், சசிகுமார் ஆகியோர் காவிரி ஆற்றில் மூழ்கிய சஞ்சீவியை மீட்டு திருவையாறு அரசு மருத்துவ மனைக்கு கொண்டு சென்றனர். ஆனால் வழியிலேயே அவர் இறந்து விட்டார்.
இதுபற்றிய புகாரின் பேரில் திருவையாறு இன்ஸ்பெக்டர் ஸ்ரீதர் விசாரணை நடத்தி வருகிறார்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்