search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    மதுரை அருகே மின்சாரம் தாக்கி மாணவன் பலி
    X

    மதுரை அருகே மின்சாரம் தாக்கி மாணவன் பலி

    மதுரை அருகே மின்சாரம் தாக்கி மாணவன் பலியான சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    பைக்காரா முத்துராம லிங்கபுரத்தைச் சேர்ந்தவர் காசிநாதன். இவரது மகன் வினித்குமார் (13). பள்ளி மாணவனான இவன் நேற்று மொட்டை மாடியில் துணிகளை காயப்போட சென்றான்.

    அப்போது தவறுதலாக அங்கிருந்த மின்வயரில் வினித்குமார் கை பட்டு விட்டது இதில் மின்சாரம் தாக்கிய அவனை தனியார் ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். ஆனால் சிகிச்சை பலனின்றி வினித்குமார் இறந்தான்.

    இதுகுறித்து சுப்பிரமணியபுரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
    Next Story
    ×