search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    பிளாஸ்டிக் பயன்பாட்டை தடுக்க கடலூர் உழவர் சந்தையில் விழிப்புணர்வு முகாம்
    X

    பிளாஸ்டிக் பயன்பாட்டை தடுக்க கடலூர் உழவர் சந்தையில் விழிப்புணர்வு முகாம்

    பிளாஸ்டிக் பயன்பாட்டை தடுக்க கடலூர் உழவர் சந்தையில் நடைபெற்ற விழிப்புணர்வு முகாமில் சணல் பைகள் பொதுமக்களுக்கு வழங்கப்பட்டது. #PlasticBan
     கடலூர்:

    பிளாஸ்டிக் பயன்பாட்டை தடுக்க கடலூர் உழவர் சந்தையில் விழிப்புணர்வு முகாம் நடைபெற்றது. வேளாண் வணிக துணை இயக்குனர் ஜெயக்குமார் தலைமை தாங்கினார். உழவர்சந்தை நிர்வாக அலுவலர் ஆறுமுகம், உதவி வேளாண்மை அலுவலர்கள் சீனிவாசன் பாரதி, கார்த்திகேயன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

    பின்னர் பிளாஸ்டிக் பயன்படுத்துவதால் ஏற்படும் பாதிப்புகள் மற்றும் பிளாஸ்டிக் பொருட்களால் சுற்றுச்சூழல் பாதிப்பு, மண்வளம் பாதிப்பு குறித்து பொதுமக்களிடம் அறிவுறுத்தப்பட்டது.

    மேலும் பிளாஸ்டிக் பைகளை தவிர்த்து வருங்காலங்களில் துணி பைகள், சணல் பைகள் ஆகியவற்றை பயன்படுத்தி சுற்றுச்சூழல் மற்றும் மண்வளத்தை பாதுகாக்க அனைவரும் உறுதிமொழி எடுக்க வேண்டும் என பொதுமக்களிடம் கூறப்பட்டது.

    பிளாஸ்டிக் பயன்பாட்டை தவிர்ப்பதற்காக சணல் பைகள் பொதுமக்களுக்கு வழங்கப்பட்டது. இந்த நிகழ்ச்சியில் உழவர் சந்தை ஊழியர்கள் கலந்து கொண்டனர். #PlasticBan
    Next Story
    ×