search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    விமான பயணியிடம் ரூ.60 லட்சம் அமெரிக்க டாலர் பறிமுதல்
    X

    விமான பயணியிடம் ரூ.60 லட்சம் அமெரிக்க டாலர் பறிமுதல்

    சென்னை விமான நிலையத்தில் பயணியிடம் இருந்து ரூ.60 லட்சம் அமெரிக்க டாலர் பணத்தை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.
    ஆலந்தூர்:

    இன்று காலை சென்னையில் இருந்து துபாய் வழியாக அமெரிக்கா செல்லும் பயணிகள் விமானம் புறப்பட தயாரானது. அதில் பயணம் செய்யும் பயணிகளிடம் சுங்கத்துறை அதிகாரிகள் சோதனையிட்டனர்.

    அப்போது, வெளிநாட்டில் வாழும் இந்திய வம்சா வழி பயணி ஒருவர் ரூ.60 லட்சம் மதிப்புள்ள அமெரிக்க டாலர்களை மறைத்து வைத்திருப்பது தெரிய வந்தது. இதற்குரிய முறையான ஆவணங்கள் அவரிடம் இல்லை.

    எனவே அந்த அமெரிக்க டாலர் பணத்தை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். இது குறித்து விசாரணை நடைபெறுகிறது. #tamilnews
    Next Story
    ×