என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
சிந்தாமணி கிராமத்தில் தூய்மை இந்தியா விழிப்புணர்வு முகாம்
Byமாலை மலர்30 Sep 2018 5:28 PM GMT (Updated: 30 Sep 2018 5:28 PM GMT)
சிந்தாமணி கிராமத்தில் தூய்மை இந்தியா விழிப்புணர்வு முகாம் நடைபெற்றது.
ஜெயங்கொண்டம்:
பெரம்பலூர் மாவட்ட நீர்வடி பகுதி மேம்பாட்டு முகமை சார்பில், அரியலூர் மாவட்டம் தா.பழூர் ஒன்றியம் சிந்தாமணி கிராமத்தில் தூய்மை இந்தியா விழிப்புணர்வு முகாம் நடைபெற்றது. முகாமிற்கு மகளிர் சுயஉதவிக்குழுவின் கோப்புகள் பராமரிப்பு கணக்காளர் முத்தழகி தலைமை தாங்கினார். அங்கன்வாடி குழந்தைகள் காப்பாளர் கனிமொழி முன்னிலை வகித்தார்.
நீர்வடி பகுதி வளர்ச்சி அணி உறுப்பினர் மற்றும் சமூகவியலர் பீமா ராமலிங்கம் தூய்மை இந்தியா விழிப்புணர்வு முகாம் குறித்து பேசுகையில், வீட்டை நாம் சுத்தமாக வைத்து கொள்வது போல், நமது கிராமத்தையும், நகரத்தையும் தூய்மையாக வைத்திருந்தால் மட்டுமே இந்தியாவின் தூய்மை நிவர்த்தி அடையச் செய்திட முடியும் என்றார். தொடர்ந்து தூய்மை இந்தியா குறித்த உறுதிமொழி எடுத்து கொண்டனர். முகாமில் சிந்தாமணி கிராமத்தை சேர்ந்த மகளிர் சுயஉதவிக்குழுக்கள் மற்றும் பொதுமக்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
பெரம்பலூர் மாவட்ட நீர்வடி பகுதி மேம்பாட்டு முகமை சார்பில், அரியலூர் மாவட்டம் தா.பழூர் ஒன்றியம் சிந்தாமணி கிராமத்தில் தூய்மை இந்தியா விழிப்புணர்வு முகாம் நடைபெற்றது. முகாமிற்கு மகளிர் சுயஉதவிக்குழுவின் கோப்புகள் பராமரிப்பு கணக்காளர் முத்தழகி தலைமை தாங்கினார். அங்கன்வாடி குழந்தைகள் காப்பாளர் கனிமொழி முன்னிலை வகித்தார்.
நீர்வடி பகுதி வளர்ச்சி அணி உறுப்பினர் மற்றும் சமூகவியலர் பீமா ராமலிங்கம் தூய்மை இந்தியா விழிப்புணர்வு முகாம் குறித்து பேசுகையில், வீட்டை நாம் சுத்தமாக வைத்து கொள்வது போல், நமது கிராமத்தையும், நகரத்தையும் தூய்மையாக வைத்திருந்தால் மட்டுமே இந்தியாவின் தூய்மை நிவர்த்தி அடையச் செய்திட முடியும் என்றார். தொடர்ந்து தூய்மை இந்தியா குறித்த உறுதிமொழி எடுத்து கொண்டனர். முகாமில் சிந்தாமணி கிராமத்தை சேர்ந்த மகளிர் சுயஉதவிக்குழுக்கள் மற்றும் பொதுமக்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X