search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கே.கே.நகர் அருகே போலீஸ் என்று கூறி மூதாட்டியிடம் நகை பறிப்பு
    X

    கே.கே.நகர் அருகே போலீஸ் என்று கூறி மூதாட்டியிடம் நகை பறிப்பு

    கே.கே.நகர் அருகே போலீஸ் என்று கூறி மூதாட்டியிடம் நகை பறித்த சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    போரூர்:

    கே.கே.நகர் பாரதிதாசன் காலனியை சேர்ந்தவர் சந்திரா (76). ஓய்வுபெற்ற அரசு ஊழியர். இவர் நேற்று மதியம் வீட்டின் அருகே உள்ள கடைக்கு சென்று கொண்டிருந்தார்.

    அப்போது மோட்டார் சைக்கிளில் வந்த 2 பேர் நாங்கள் போலீஸ். நகைகளை இப்படி அணிந்து செல்லக் கூடாது என்று கூறினார்கள். அதை நம்பி தான் அணிந்திருந்த நகையை கழற்றினார். உடனே அவர்கள் அதை வாங்கி ஒரு காகிதத்தில் பொதிந்து கொடுத்தனர்.

    வீடு திரும்பிய அவர் காகிதத்தை பிரித்து பார்த்த போது அதில் நகை இல்லை. இதனால் அதிர்ச்சி அடைந்த அவர் எம்.ஜி.ஆர் நகர் போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    Next Story
    ×