search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    அடுத்த லெவலுக்கு போகும் சென்னை ஏர்போர்ட் - ரூ.2500 கோடி செலவில் புதிய முனையம்
    X

    அடுத்த லெவலுக்கு போகும் சென்னை ஏர்போர்ட் - ரூ.2500 கோடி செலவில் புதிய முனையம்

    சென்னை விமான நிலையத்தில் 2 ஆயிரத்து 500 கோடி ரூபாய் செலவில் புதிய முனையம் அமைக்க இருப்பதாக இந்திய விமானநிலைய ஆணையம் அறிவித்துள்ளது. #ChennaiAirport
    சென்னை:

    சென்னை விமான நிலையத்தில் கடந்த 2 மாதங்களில் பயணிகள் வரவு அதிகரித்து காணப்படுகிறது. இந்த நிலை இப்படியே நீடிக்கும்பட்சத்தில் தற்போது இருக்கும் முனையங்கள் நெரிசல் நிறைந்ததாக மாறக்கூடும்.

    இந்த நிலையை சரிசெய்ய, புதிய முனையம் கட்ட இருப்பதாக விமானநிலைய இயக்குனர் சந்திரமவுலி தெரிவித்துள்ளார். இந்த புதிய முனையமானது 2 ஆயிரத்து 500 கோடி ரூபாய் செலவில் கட்டப்பட இருப்பதாகவும், சுமார் 42 முதல் 45 மாதங்களில் கட்டி முடிக்கப்படும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

    இதற்கான பணிகள் துவங்கப்பட்டுவிட்டதாகவும், மாசு கட்டுப்பாட்டு வாரியத்திடம் ஒப்புதல் வாங்கும் பணியும் இறுதிக்கட்டத்தில் இருப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார். #ChennaiAirport
    Next Story
    ×