search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    வனவிலங்குகள் நடமாட்டத்தை கட்டுப்படுத்த சிம்ஸ் பூங்காவில் சோலார் மின்விளக்குகள்
    X

    வனவிலங்குகள் நடமாட்டத்தை கட்டுப்படுத்த சிம்ஸ் பூங்காவில் சோலார் மின்விளக்குகள்

    வனவிலங்குகள் நடமாட்டத்தை கட்டுப்படுத்த சிம்ஸ் பூங்காவில் படகு இல்லம் உள்ளிட்ட இடங்களில் மொத்தம் 6 சோலார் மின்விளக்குகள் அமைக்கப்பட்டுள்ளன.
    குன்னூர்:

    நீலகிரி மாவட்டத்தில் ஊட்டிக்கு அடுத்தபடியாக குன்னூர் முக்கியத்துவம் பெறுகிறது. மேலும் ஊட்டி, கூடலூருக்கு செல்ல குன்னூர்- மேட்டுப்பாளையம் சாலை பிரதானமாக இருக்கிறது.

    இங்கு சிம்ஸ் பூங்கா முக்கிய சுற்றுலா தலமாக விளங்குகிறது. இந்த பூங்கா காப்புக்காடு அருகில் உள்ளதால், வனவிலங்குகளின் நடமாட்டம் இருக்கிறது. குறிப்பாக காட்டெருமைகள் அடிக்கடி புகுந்து, மலர் நாற்றுகளை மிதித்து நாசம் செய்கின்றன. மேலும் சுற்றுலா பயணிகளையும் தாக்குகின்றன. எனவே பூங்காவுக்குள் இரவு நேரத்தில் வனவிலங்குகள் புகுவதை தடுக்க சோலார் மின்விளக்குகள் அமைக்க முடிவு செய்யப்பட்டது.

    அதன்படி ரூ.1 லட்சத்து 25 ஆயிரம் செலவில் படகு இல்லம் உள்ளிட்ட இடங்களில் மொத்தம் 6 சோலார் மின்விளக்குகள் அமைக்கும் பணி நடந்து வருகிறது. 
    Next Story
    ×