என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
ஜெயங்கொண்டம் அருகே தைலமரக்காட்டில் தூக்குப்போட்டு தற்கொலை செய்த வாலிபர்
Byமாலை மலர்27 Sep 2018 3:06 PM GMT (Updated: 27 Sep 2018 3:06 PM GMT)
ஜெயங்கொண்டம் அருகில் உள்ள தைல மரத்தோப்பில் துப்பட்டாவால் வாலிபர் தூக்கில் தொங்கிய நிலையில் இறந்து கிடந்தார். இது குறித்து தகவல் அறிந்த போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
ஜெயங்கொண்டம்:
ஜெயங்கொண்டம் அருகே உள்ள கல்லாத்தூர் மாங்கொட்டை தெருவை சேர்ந்தவர் மாயகிருஷ்ணன் (வயது 30). இவருக்கு இன்னும் திருமணம் ஆகவில்லை. கேரளாவில் கூலி வேலை செய்து வந்தார்.நேற்று காலை ஊருக்கு வந்த அவர், பின்னர் வெளியே சென்றார். அதன்பிறகு அவர் வீடு திரும்பவில்லை.
இந்தநிலையில் ஜெயங்கொண்டம் அருகில் உள்ள தைல மரத்தோப்பில் துப்பட்டாவால் தூக்கில் தொங்கிய நிலையில் மாயகிருஷ்ணன் இறந்து கிடந்தார்.
இது குறித்து தகவல் அறிந்த ஜெயங்கொண்டம் இன்ஸ்பெக்டர் ராஜமோகன் சம்பவ இடத்திற்கு சென்று உடலை பார்வையிட்டார். பின்னர் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக ஜெயங்கொண்டம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மாயகிருஷ்ணன் காதல் தோல்வி காரணமாக தற்கொலை செய்தாரா? அல்லது கொலை செய்யப்பட்டு தூக்கில் தொங்கவிடப்பட்டாரா? என்று பல்வேறு கோணங்களில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X