search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    மஸ்கட்டில் இருந்து ரூ.15 லட்சம் தங்கம் கடத்தல் - பெண்ணிடம் விசாரணை
    X

    மஸ்கட்டில் இருந்து ரூ.15 லட்சம் தங்கம் கடத்தல் - பெண்ணிடம் விசாரணை

    சென்னை விமான நிலையத்தில் மஸ்கட்டில் இருந்து வந்த ஏர் இந்தியா விமானத்தில் கடத்தி வரப்பட்ட ரூ.15 லட்சம் தங்கத்தை அதிகாரிகள் கண்டுபிடித்தனர்.
    சென்னை:

    மஸ்கட்டில் இருந்து இன்று அதிகாலை 4.30 மணிக்கு ஏர் இந்தியா விமானம் சென்னை வந்தது.

    விமானத்தில் வந்த சுபாஷினி என்ற பெண்ணை அதிகாரிகள் தனி அறைக்கு அழைத்து சென்று சோதனை செய்தனர். அவரது ஜீன்ஸ் பேண்ட் மற்றும் உள்ளாடையில் இருந்து 4 தங்க கட்டிகள் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. அவற்றின் மதிப்பு ரூ.15 லட்சம் ஆகும். அவரிடம் தொடர்ந்து விசாரணை நடந்து வருகிறது.

    Next Story
    ×