search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    மளிகை கடையின் மேற்கூரையில் பதுக்கி வைத்திருந்த 82 கிலோ குட்கா பறிமுதல்
    X

    மளிகை கடையின் மேற்கூரையில் பதுக்கி வைத்திருந்த 82 கிலோ குட்கா பறிமுதல்

    தாதகாப்பட்டி மெயின் ரோட்டில் உள்ள மளிகை கடையின் மேற்கூரையில் பதுக்கி வைத்திருந்த 82 கிலோ குட்காவை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.
    சேலம்:

    சேலம் தாதகாப்பட்டி மெயின் ரோட்டில் உள்ள வட மாநிலத்தை சேர்ந்த ஈஸ்வரலால் என்பவருடைய மளிகை கடையில் தமிழக அரசால் தடைசெய்யப்பட்ட குட்கா புகையிலை மறைத்து வைத்திருப்பதாக சேலம் மாவட்ட உணவு பாதுகாப்பு நியமன அதிகாரி மாரியப்பனுக்கு தகவல் கிடைத்தது.

    இதையடுத்து மாரியப்பன் தலைமையில் அலுவலர்கள் சம்பந்தப்பட்ட மளிகை கடைக்கு சென்று அதிரடி சோதனை நடத்தினார்கள். அப்போது கடையின் மேற்கூரையில் மறைத்து 3 மூட்டைகளில் குட்கா வைத்திருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. இந்த மூட்டைகளை வெளியே எடுத்து பார்த்தனர். அதில் மொத்தம் 82 கிலோ குட்கா இருந்தது. இவற்றை பறிமுதல் செய்து மாரியப்பன் தலைமையிலான அதிகாரிகள் ஆய்வு கூடத்திற்கு அனுப்பி வைத்தனர்.

    முதற்கட்டமாக மளிகை கடையின் உரிமத்தை ரத்து செய்து அதிகாரிகள் நடவடிக்கை எடுத்தனர். மேல் நடவடிக்கை எடுப்பதற்காக  தாதகாப்பட்டி போலீஸ் நிலையத்துக்கு அதிகாரிகள் பரிந்துரை செய்துள்ளனர். இது குறித்து மாரியப்பன் கூறியதாவது:-

    மளிகை கடையில் குட்கா விற்பனை செய்வதாக எங்களுக்கு ஒருவர் தகவல் தெரிவித்தார். அதன்பேரில் சோதனையிட்டு, குட்காவை பறிமுதல் செய்துள்ளோம். இதன் மதிப்பு ரூ. 60 ஆயிரம் இருக்கும். கடந்த 3 மாதத்தில் இதுவரை 550 கிலோ குட்கா பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. தடைசெய்யப்பட்டுள்ள குட்காவை விற்பனை செய்தால் அல்லது பதுக்கி வைத்தால் அவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும்.

    இவ்வாறு அவர் கூறினார்.
    Next Story
    ×