என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
ராமேசுவரம் அக்னிதீர்த்த கடற்கரையில் பெண்ணிடம் பணப்பை பறிப்பு
ராமேசுவரம்:
ராமேசுவரம் அக்னிதீர்த்த கடற்கரைக்கு தினமும் ஏராளமானோர் வந்து தங்கள் முன்னோர்களுக்கு தர்ப்பணம் செய்து வருகின்றனர். தூத்துக்குடி மாவட்டம் எட்டயபுரத்தைச் சேர்ந்த கருப்பசாமி (வயது 47) தனது உறவினர்கள் 10 பேருடன் இன்று காலை ராமேசுவரம் வந்தார்.
அவர், தனது முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுத்து விட்டு அக்னி தீர்த்த கடலில் நீராட சென்றார். அவருடன் உறவினர்களும் குளிக்கச் சென்றதால் தங்களது பணம், செல்போன்கள், ஏ.டி.எம். கார்டுகள் போன்றவற்றை உறவு பெண்ணான கயல் விழியிடம் கொடுத்து சென்றனர்.
7 செல்போன்கள், ரூ.5 ஆயிரம் மற்றும் ஏ.டி.எம். கார்டுகள் போன்றவற்றை தனது கைப்பையில் வைத்து கொண்டு கயல்விழி கடற்கரை சாலையில் அமர்ந்திருந்தார். அப்போது அங்கு வந்த ஒரு வாலிபர், கீழே பணம் கிடப்பதாக கூறினார். அதனை நம்பி கயல்விழி திரும்பி பார்த்தபோது அந்த வாலிபர் கைப்பையை பறித்துக் கொண்டு மின்னலாக மறைந்து விட்டார்.
இதுகுறித்து ராமேசுவரம் நகர் போலீசில் கருப்பசாமி புகார் செய்தார். போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்