search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    ராமேசுவரம் அக்னிதீர்த்த கடற்கரையில் பெண்ணிடம் பணப்பை பறிப்பு
    X

    ராமேசுவரம் அக்னிதீர்த்த கடற்கரையில் பெண்ணிடம் பணப்பை பறிப்பு

    ராமேசுவரம் அக்னிதீர்த்த கடற்கரையில் பெண்ணிடம் பணம் மற்றும் செல்போன்கள் வைத்திருந்த பையை மர்ம மனிதன் பறித்துச் சென்றான்.

    ராமேசுவரம்:

    ராமேசுவரம் அக்னிதீர்த்த கடற்கரைக்கு தினமும் ஏராளமானோர் வந்து தங்கள் முன்னோர்களுக்கு தர்ப்பணம் செய்து வருகின்றனர். தூத்துக்குடி மாவட்டம் எட்டயபுரத்தைச் சேர்ந்த கருப்பசாமி (வயது 47) தனது உறவினர்கள் 10 பேருடன் இன்று காலை ராமேசுவரம் வந்தார்.

    அவர், தனது முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுத்து விட்டு அக்னி தீர்த்த கடலில் நீராட சென்றார். அவருடன் உறவினர்களும் குளிக்கச் சென்றதால் தங்களது பணம், செல்போன்கள், ஏ.டி.எம். கார்டுகள் போன்றவற்றை உறவு பெண்ணான கயல் விழியிடம் கொடுத்து சென்றனர்.

    7 செல்போன்கள், ரூ.5 ஆயிரம் மற்றும் ஏ.டி.எம். கார்டுகள் போன்றவற்றை தனது கைப்பையில் வைத்து கொண்டு கயல்விழி கடற்கரை சாலையில் அமர்ந்திருந்தார். அப்போது அங்கு வந்த ஒரு வாலிபர், கீழே பணம் கிடப்பதாக கூறினார். அதனை நம்பி கயல்விழி திரும்பி பார்த்தபோது அந்த வாலிபர் கைப்பையை பறித்துக் கொண்டு மின்னலாக மறைந்து விட்டார்.

    இதுகுறித்து ராமேசுவரம் நகர் போலீசில் கருப்பசாமி புகார் செய்தார். போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    Next Story
    ×