search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    பூந்தமல்லியில் மின்சாரம் தாக்கி மாணவர் பலி
    X

    பூந்தமல்லியில் மின்சாரம் தாக்கி மாணவர் பலி

    பூந்தமல்லியில் மின்சாரம் தாக்கி மாணவர் பலியான சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். #Death

    பூந்தமல்லி:

    பூந்தமல்லி அடுத்த சென்னீர்குப்பம் செல்வ கணபதி நகர் முருகன் கோவில் தெருவை சேர்ந்தவர் மாரி. இவரது மகன் திவாகர் (19). இவர் செம்பரபாக்கத்தில் உள்ள தனியார் பாலிடெக்னிக்கில் 3 ஆம் ஆண்டு படித்து வருகிறார்.

    நேற்று மாலை வீட்டில் வாசிங்மி‌ஷனில் துணி துவைக்க மின் வயர் இணைப்பு கொடுக்கும் போது தவறுதலாக வாயில் வைத்து மின் வயரை கடித்த போது மின்சாரம் தாக்கி தூக்கி வீசப்பட்டு சம்பவ இடத்திலேயே பலியானார்.

    இதுகுறித்து பூந்தமல்லி போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    Next Story
    ×