search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    பேரறிவாளன் உள்ளிட்ட 7 பேரையும் விடுவிக்கக் கூடாது - ஆளுநரிடம் 15 குடும்பத்தினர் மனு
    X

    பேரறிவாளன் உள்ளிட்ட 7 பேரையும் விடுவிக்கக் கூடாது - ஆளுநரிடம் 15 குடும்பத்தினர் மனு

    ராஜீவ் கொலை வழக்கில் தண்டனை பெற்ற பேரறிவாளன் உள்ளிட்ட 7 பேரையும் விடுவிக்கக்கூடாது என ஆளுநரிடம் 15 குடும்பத்தினர் மனு அளித்துள்ளனர். #RajivCaseConvicts #Perarivalan #TNGovernor
    சென்னை:

    ராஜீவ் கொலை வழக்கில் ஆயுள் தண்டனை அனுபவித்து வரும் பேரறிவாளன் உள்ளிட்ட 7 பேரையும் விடுவிப்பது பற்றி ஆளுநரே முடிவு எடுக்கலாம் என உச்ச நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது. இதையடுத்து அவர்களை விடுவிக்கும்படி ஆளுநருக்கு தமிழக அமைச்சரவை பரிந்துரை செய்துள்ளது. இதன் மீது ஆளுநர் இதுவரை எந்த முடிவும் எடுக்கவில்லை.



    இந்நிலையில் ராஜீவ் கொலை சம்பவத்தின்போது உயிரிழந்த 15 பேரின் குடும்பத்தினர் இன்று தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோகித்தை சந்தித்து மனு அளித்தனர். அதில், பேரறிவாளன் உள்ளிட்ட 7 பேரை விடுவிக்கக்கூடாது என கூறியிருந்தனர்.

    இதன்மூலம் 7 பேரை விடுதலை விவகாரத்தில் ஆளுநர் முடிவெடுப்பதில் மேலும் காலதாமதம் ஆகும் என தெரிகிறது. #RajivCaseConvicts #Perarivalan #TNGovernor

    Next Story
    ×