என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
பாராளுமன்ற தேர்தல் - தமிழக பார்வையாளர்களுடன் ராகுல்காந்தி இன்று ஆலோசனை
Byமாலை மலர்26 Sep 2018 7:20 AM GMT (Updated: 26 Sep 2018 7:20 AM GMT)
அகில இந்திய காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி, இன்று மாலை தமிழ்நாடு காங்கிரஸ் மேலிட பார்வையாளர்களான முகில் வாஸ்னிக், சஞ்சய்தத் ஆகியோரை சந்தித்து பேசுகிறார். #Congress #RahulGandhi
சென்னை:
தமிழ்நாடு காங்கிரஸ் மேலிட பார்வையாளர்களாக முகுல் வாஸ்னிக், சஞ்சய்தத் ஆகியோர் உள்ளனர். சமீபத்தில் சென்னையில் நடந்த மாவட்ட காங்கிரஸ் தலைவர்கள் கூட்டத்தில் கட்சியின் மேலிட பார்வையாளர்களான முகுல்வாஸ்னிக், சஞ்சய்தத் ஆகியோர் பங்கேற்றனர். அப்போது மாநிலத்தில்ங கட்சி நிலவரம் பற்றி கேட்டு அறிந்தனர்.
கட்சி வளர்ச்சிக்கு என்ன செய்யலாம்? பாராளுமன்ற தேர்தல் கூட்டணி எவ்வாறு அமைய வேண்டும் என்பது குறித்து நிர்வாகிகளிடம் கேட்டு அறிந்தனர். யாரை புதிய தலைவராக நியமிக்கலாம் என்பது பற்றியும் கருத்து கேட்டதாக சொல்லப்படுகிறது.
தமிழக மேலிட பார்வையாளர்களில் ஒருவரான சஞ்சய்தத் நேற்று முன்தினம் தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலினை சென்னையில் சந்தித்து பேசினார். அப்போது பாராளுமன்ற தேர்தலில் தி.மு.க.-காங்கிரஸ் கூட்டணி அமைப்பது குறித்து கருத்துக்கள் பரிமாறப்பட்டன.
பாராளுமன்ற தேர்தலில் தி.மு.க.-காங்கிரஸ் கூட்டணி உறுதி என்ற நிலையில், பாராளுமன்ற தேர்தலுக்கு பிறகும் பா.ஜனதாவுடன் கூட்டணி இல்லை என்று மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். எனவே காங்கிரஸ் உற்சாகம் அடைந்துள்ளது. கட்சியை பலப்படுத்துவதற்கான நடவடிக்கைகளும் தொடங்கி உள்ளன.
காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி, மாநிலங்களின் நிர்வாகிகள், கட்சியின் பார்வையாளர்களை சந்தித்து ஆலோசித்து வருகிறார். இன்று காலை குஜராத் மாநில காங்கிரஸ் நிர்வாகிகளை சந்திக்கிறார்.
இன்று மாலை தமிழ்நாடு காங்கிரஸ் மேலிட பார்வையாளர்களான முகில் வாஸ்னிக், சஞ்சய்தத் ஆகியோரை சந்தித்து பேசுகிறார். அப்போது தமிழ்நாடு காங்கிரஸ் புதிய தலைவராக யாரை நியமிக்கலாம் என்பது குறித்து கருத்து கேட்கிறார்.
இதையடுத்து புதிய தலைவர் முடிவு செய்யப்படுவார் என்று தெரிகிறது. பாராளுமன்ற தேர்தலில் தி.மு.க. மற்றும் கூட்டணி கட்சிகளுடன் தமிழ்நாட்டில் எப்படி இணைந்து செயல்படுவது என்பது குறித்தும் இதில் ஆலோசிக்கப்படுகிறது. #Congress #RahulGandhi #MukulWasnik
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X