search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    விழுப்புரம் அருகே புதுவையில் இருந்து சென்னைக்கு காரில் மதுபாட்டில்கள் கடத்தல் - டிரைவர் கைது
    X

    விழுப்புரம் அருகே புதுவையில் இருந்து சென்னைக்கு காரில் மதுபாட்டில்கள் கடத்தல் - டிரைவர் கைது

    விழுப்புரம் அருகே புதுவையில் இருந்து சென்னைக்கு காரில் மதுபாட்டில்கள் கடத்திய டிரைவரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். #arrest

    விழுப்புரம்:

    புதுவையில் இருந்து தமிழகத்துக்கு மது கடத்துவதை தடுக்கும்பொருட்டு விழுப்புரத்தில் பல்வேறு சோதனை சாவடிகள் அமைக்கப்பட்டு போலீசார் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.

    இந்த நிலையில் நேற்று இரவு விழுப்புரம் கோட்டக் குப்பம் சோதனை சாவடியில் போலீஸ் ஏட்டு பாஸ்கரன் தலைமையிலான போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அந்த வழியாக வந்த ஒரு காரை தடுத்து நிறுத்தி டிரைவரிடம் போலீசார் விசாரணை நடத்தினர். அப்போது அவர் முன்னுக்கு பின் முரணான தகவலை தெரிவித்தார்.

    இதில் சந்தேகம் அடைந்த போலீசார் காரை சோதனை செய்தபோது அதில் 6 அட்டை பெட்டிகள் இருந்தன. அதை திறந்து பார்த்தபோது புதுவையில் இருந்து கடத்தி வந்த 712 விலை உயர்ந்த மதுபாட்டில்கள் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.

    இதைத்தொடர்ந்து டிரைவரிடம் நடத்திய விசாரணையில் அவர் புதுவை மாநிலம் ருத்ராபாளையம் பகுதியை சேர்ந்த ராமச்சந்திரன் (வயது 34) என்பதும், அவர் புதுவையில் இருந்து சென்னைக்கு மதுபாட்டில்களை காரில் கடத்தி செல்வதும் தெரியவந்தது.

    இதைத்தொடர்ந்து காரையும், மதுபாட்டில்களையும் பறிமுதல் செய்து கோட்டக்குப்பம் மது விலக்கு போலீசாரிடம் ஒப் படைத்தனர். இவற்றின் மதிப்பு ரூ.8 லட்சம் ஆகும். கார் டிரைவர் ராமச்சந்திரனையும் போலீசார் கைது செய்தனர்.

    Next Story
    ×