என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
புதுவை அரசு பஸ் ஊழியர்கள் வேலை நிறுத்தம்- பஸ்கள் ஓடாததால் பயணிகள் அவதி
Byமாலை மலர்26 Sep 2018 5:39 AM GMT (Updated: 26 Sep 2018 5:39 AM GMT)
சம்பள பாக்கியை வழங்ககோரி புதுவை அரசு பஸ் ஊழியர்கள் இன்று 2-வது நாளாக வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளனர். பஸ்கள் ஓடாததால் பயணிகள் கடும் அவதிக்குள்ளாகி உள்ளனர். #BusStrike
புதுச்சேரி:
புதுவை அரசின் சாலை போக்குவரத்து கழகத்தின் சார்பில் உள்ளூர் மற்றும் வெளியூர்களுக்கு 137 பஸ்கள் இயக்கப்படுகிறது.
பெங்களூர், சென்னை, திருப்பதி, நாகர்கோவில், மாகி, கடலூர், விழுப்பும் உள்ளிட்ட பகுதிகளுக்கு பஸ்கள் இயக்கப்படுகிறது. அதோடு புதுவையின் நகர பகுதியிலும், சுற்றுப்புற கிராமங்களுக்கும் பஸ் மற்றும் மினி பஸ்களும் இயக்கப்படுகிறது.
சாலை போக்குவரத்து கழகத்தில் நிரந்தர ஊழியர்கள் 450 பேரும், ஒப்பந்த ஊழியர்கள் 250 பேரும் பணியாற்றி வருகின்றனர். இவர்களுக்கு கடந்த 2 மாதமாக சம்பளம் வழங்கப்படவில்லை.
சம்பளம் வழங்க கோரி போக்குவரத்து ஊழியர்கள் துறை அதிகாரிகளிடம் பல முறை கோரிக்கை விடுத்தனர். ஆனால், எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.
இதனையடுத்து அனைத்து தொழிற்சங்கத்தினரும், நேற்று மாலை துறை அதிகாரிகளுடன் பேச்சு வார்த்தை நடத்த திட்டமிட்டிருந்தனர். இதற்காக ஊழியர்கள் சங்க நிர்வாகிகள் தலைமை அலுவலகத்திற்கு வந்தனர்.
ஆனால், நீண்ட நேரம் காத்திருந்தும் அதிகாரிகள் யாரும் வரவில்லை. இதனால் ஆத்திரமடைந்த அனைத்து தொழிற்சங்கத்தினர் திடீர் வேலை நிறுத்த அறிவிப்பு செய்தனர்.
இதனையடுத்து மாலை 6 மணிக்கு மேல் அரசு பஸ்கள் இயக்கப்படவில்லை. நகரம், கிராம பகுதிகளுக்கு செல்லும் பஸ்கள் மட்டுமல்லாது வெளியூர் செல்லும் பஸ்களும் இயக்கப்படவில்லை. இதனால், பெங்களூர், சென்னை, திருப்பதி, நாகர்கோவில், மாகி உள்ளிட்ட பகுதிகளுக்கு முன்பதிவு செய்த பயணிகளும் அவதியடைந்தனர்.
பேச்சுவார்த்தை நடத்தி சம்பளம் பாக்கி தொடர்பாக உறுதி அளிக்கும் வரை வேலைநிறுத்த போராட்டத்தை தொடர்வதாகவும் தொழிற் சங்கத்தினர் அறிவித்தனர். இதனால், இன்று (புதன் கிழமை) 2-வது நாளாக வேலை நிறுத்த போராட்டம் தொடர்கிறது.
அரசு பஸ் ஊழியர்களின் வேலை நிறுத்த போராட்டத்தால் பயணிகள் கடும் அவதிக்குள்ளாகி உள்ளனர். #BusStrike
புதுவை அரசின் சாலை போக்குவரத்து கழகத்தின் சார்பில் உள்ளூர் மற்றும் வெளியூர்களுக்கு 137 பஸ்கள் இயக்கப்படுகிறது.
பெங்களூர், சென்னை, திருப்பதி, நாகர்கோவில், மாகி, கடலூர், விழுப்பும் உள்ளிட்ட பகுதிகளுக்கு பஸ்கள் இயக்கப்படுகிறது. அதோடு புதுவையின் நகர பகுதியிலும், சுற்றுப்புற கிராமங்களுக்கும் பஸ் மற்றும் மினி பஸ்களும் இயக்கப்படுகிறது.
சாலை போக்குவரத்து கழகத்தில் நிரந்தர ஊழியர்கள் 450 பேரும், ஒப்பந்த ஊழியர்கள் 250 பேரும் பணியாற்றி வருகின்றனர். இவர்களுக்கு கடந்த 2 மாதமாக சம்பளம் வழங்கப்படவில்லை.
சம்பளம் வழங்க கோரி போக்குவரத்து ஊழியர்கள் துறை அதிகாரிகளிடம் பல முறை கோரிக்கை விடுத்தனர். ஆனால், எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.
இதனையடுத்து அனைத்து தொழிற்சங்கத்தினரும், நேற்று மாலை துறை அதிகாரிகளுடன் பேச்சு வார்த்தை நடத்த திட்டமிட்டிருந்தனர். இதற்காக ஊழியர்கள் சங்க நிர்வாகிகள் தலைமை அலுவலகத்திற்கு வந்தனர்.
ஆனால், நீண்ட நேரம் காத்திருந்தும் அதிகாரிகள் யாரும் வரவில்லை. இதனால் ஆத்திரமடைந்த அனைத்து தொழிற்சங்கத்தினர் திடீர் வேலை நிறுத்த அறிவிப்பு செய்தனர்.
இதனையடுத்து மாலை 6 மணிக்கு மேல் அரசு பஸ்கள் இயக்கப்படவில்லை. நகரம், கிராம பகுதிகளுக்கு செல்லும் பஸ்கள் மட்டுமல்லாது வெளியூர் செல்லும் பஸ்களும் இயக்கப்படவில்லை. இதனால், பெங்களூர், சென்னை, திருப்பதி, நாகர்கோவில், மாகி உள்ளிட்ட பகுதிகளுக்கு முன்பதிவு செய்த பயணிகளும் அவதியடைந்தனர்.
பேச்சுவார்த்தை நடத்தி சம்பளம் பாக்கி தொடர்பாக உறுதி அளிக்கும் வரை வேலைநிறுத்த போராட்டத்தை தொடர்வதாகவும் தொழிற் சங்கத்தினர் அறிவித்தனர். இதனால், இன்று (புதன் கிழமை) 2-வது நாளாக வேலை நிறுத்த போராட்டம் தொடர்கிறது.
அரசு பஸ் ஊழியர்களின் வேலை நிறுத்த போராட்டத்தால் பயணிகள் கடும் அவதிக்குள்ளாகி உள்ளனர். #BusStrike
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X