search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    திருப்பூரில் கள்ளக்காதலி பிரிந்த ஏக்கத்தில் பனியன் தொழிலாளி தற்கொலை
    X

    திருப்பூரில் கள்ளக்காதலி பிரிந்த ஏக்கத்தில் பனியன் தொழிலாளி தற்கொலை

    திருப்பூரில் கள்ளக்காதலி பிரிந்த ஏக்கத்தில் பனியன் தொழிலாளி தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
    திருப்பூர்:

    திருப்பூர் ராக்கியா பாளையம் பகுதியை சேர்ந்தவர் சலீம். இவரது மகன் சதாம் உசேன் (22). இவர் அதே பகுதியில் உள்ள தனியார் நிறுவனத்தில் டெய்லராக பணியாற்றி வருகிறார். அதே நிறுவனத்தில் வேலை பார்க்கும் ஒரு இளம்பெண்ணுக்கும் சதாம் உசேனுக்கும் இடையே கள்ளக்காதல் ஏற்பட்டது. அந்த இளம்பெண்ணுக்கு கணவர் மற்றும் 2 குழந்தைகள் உள்ளனர். கள்ளக்காதல் ஜோடி கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு திருப்பூர் செட்டிபாளையம் பகுதியில் வாடகை வீட்டில் தங்கினர்.

    இந்த நிலையில் இளம் பெண்ணுக்கு கணவர், குழந்தைகளை பிரிந்து இருக்க முடியாமல் மனமாற்றம் ஏற்பட்டது. மீண்டும் கணவருடன் செல்வதாக கூறினார். இதனை சதாம் உசேன் தடுத்தார். அதனையும் மீறி இளம்பெண் கணவருடன் சென்றுவிட்டார். இதனால் மனம் உடைந்து காணப்பட்ட சதாம் உசேன் வீட்டில் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து நல்லூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
    Next Story
    ×