search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கம்பம் அருகே மாமியாரை கோடாரியால் தாக்கிய மருமகன்
    X

    கம்பம் அருகே மாமியாரை கோடாரியால் தாக்கிய மருமகன்

    கம்பம் அருகே மாமியாரை கோடாரியால் தாக்கிய மருமகன் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

    தேனி:

    கம்பம் நந்தனார் காலனியை சேர்ந்தவர் ஆரோக்கியராஜ். இவரது மனைவி மரியா (23). இவர் அதே பகுதியை சேர்ந்த மஞ்சுளா என்பவரிடம் ரூ.2 ஆயிரம் கடன் வாங்கி இருந்தார். இந்த விபரம் தெரிய வரவே ஆரோக்கியராஜ் தனது மனைவியை கண்டித்தார். இதனால் அவருடன் சண்டை போட்டுக்கொண்டு மரியா தனது பெற்றோர் வீட்டிற்கு சென்று விட்டார்.

    சம்பவத்தன்று மனைவியை அழைத்து வருவதற்காக ஆரோக்கியராஜ் சென்றார்.

    அப்போது மீண்டும் கணவன்-மனைவி இடையே தகராறு ஏற்படவே அவரை ஆரோக்கியராஜ் தாக்கினார். இதனை பார்த்த மாமியார் அன்புமணி சத்தம்போட்டார். இதனால் ஆத்திரம் அடைந்த ஆரோக்கிய ராஜ் மாமியார் அன்புமணியை கோடாரியால் தாக்கி கொலை மிரட்டல் விடுத்தார். படுகாயம் அடைந்த அவர் கம்பம் அரசு ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டுள்ளார்.

    இது குறித்து கம்பம் தெற்கு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    Next Story
    ×