என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
கடலூர் அருகே விபத்து- லாரி சக்கரத்தில் சிக்கி வாலிபர் மரணம்
Byமாலை மலர்25 Sep 2018 10:08 AM GMT (Updated: 25 Sep 2018 10:08 AM GMT)
கடலூர் அருகே மோட்டார் சைக்கிள் மீது லாரி மோதிய விபத்தில் வாலிபர் உடல் நசுங்கி பரிதாபமாக உயிரிழந்தார்.
கடலூர்:
விழுப்புரம் வடபுரம் பகுதியை சேர்ந்தவர் நாகமுத்து. இவரது மகன் சீனுவாசன்(வயது 25). இவர் இன்று காலை 11 மணியளவில் கடலூரை அடுத்த கூத்தப்பாக்கம் பகுதியில் மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்தார்.
அப்போது அந்த வழியாக வந்த லாரி ஒன்று சீனுவாசனின் மோட்டார் சைக்கிள் மீது மோதியது. இதில் நிலைதடுமாறி அவர் கீழே விழுந்தார். அப்போது லாரியின் சக்கரம் அவர் தலைமீது ஏறியது. இதில் சீனுவாசன் சம்பவ இடத்திலேயே தலைநசுங்கி பரிதாபமாக இறந்தார்.
இந்த விபத்து குறித்து தகவல் அறிந்ததும் திருப்பாதிரிப்புலியூர் போலீசார் சம்பவ இடம் விரைந்து சென்றனர். விபத்தில் இறந்த சீனுவாசனின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக கடலூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
இந்த விபத்து குறித்து போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
விழுப்புரம் வடபுரம் பகுதியை சேர்ந்தவர் நாகமுத்து. இவரது மகன் சீனுவாசன்(வயது 25). இவர் இன்று காலை 11 மணியளவில் கடலூரை அடுத்த கூத்தப்பாக்கம் பகுதியில் மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்தார்.
அப்போது அந்த வழியாக வந்த லாரி ஒன்று சீனுவாசனின் மோட்டார் சைக்கிள் மீது மோதியது. இதில் நிலைதடுமாறி அவர் கீழே விழுந்தார். அப்போது லாரியின் சக்கரம் அவர் தலைமீது ஏறியது. இதில் சீனுவாசன் சம்பவ இடத்திலேயே தலைநசுங்கி பரிதாபமாக இறந்தார்.
இந்த விபத்து குறித்து தகவல் அறிந்ததும் திருப்பாதிரிப்புலியூர் போலீசார் சம்பவ இடம் விரைந்து சென்றனர். விபத்தில் இறந்த சீனுவாசனின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக கடலூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
இந்த விபத்து குறித்து போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X