search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    பாராளுமன்ற தேர்தலில் காங். தி.மு.க. கூட்டணி டெபாசிட் இழக்கும் - அன்பழகன் எம்.எல்.ஏ. கணிப்பு
    X

    பாராளுமன்ற தேர்தலில் காங். தி.மு.க. கூட்டணி டெபாசிட் இழக்கும் - அன்பழகன் எம்.எல்.ஏ. கணிப்பு

    வரும் பாராளுமன்ற தேர்தலில் புதுவையில் காங்கிரஸ், தி.மு.க. கூட்டணி அமைத்து போட்டியிட்டாலும் டெபாசிட் இழக்கும் என அ.தி.மு.க. சட்டமன்ற கட்சித்தலைவர் அன்பழகன் கூறியுள்ளார்.
    புதுச்சேரி:

    புதுவை மாநில அ.தி.மு.க. சட்டமன்ற கட்சித்தலைவர் அன்பழகன் நிருபர்களிடம் கூறியதாவது:-

    புதுவையில் பல்வேறு அரசியில் கட்சிகளின் போராட்டங்களுக்கும் நாராயணசாமி ஆதரவு தெரிவித்து வருகிறார். மக்களுக்கு நன்மை செய்ய வேண்டும் என நினைத்தால் டீசல், பெட்ரோல் விலையை குறைத்திருக்கலாம், ஆனால் அதை செய்யவில்லை. இளைஞர் காங்கிரஸ் தேர்தலை நடத்தவே 4 மாதங்களை ஓட்டிவிட்டனர்.

    முதல்-அமைச்சர் நாராயணசாமி புதுவையை பிடித்த சனியன் என கவர்னரைப்பற்றி கூறி உள்ளார். இது கண்டிக்கத்தக்கது. சனி என்பது தவறு செய்பவர்களை நல்வழிபடுத்தும் கடவுள். அதற்கும் திருந்தவில்லை என்றால் தான் தண்டனை கிடைக்கும். கவர்னருக்கு அவர் அந்த பட்டம் கொடுக்க கூடாது, அந்த பட்டம் பெறும் தகுதி அவருக்கு இல்லை.

    புதுவை அமைச்சர்களுக்குள் ஒற்றுமை இல்லை. முதல்-அமைச்சர் உணவு பதப்படுத்தும் நிறுவனத்தை கொண்டு வர டெல்லிக்கு சென்றுள்ளார். ஆனால், துறை அமைச்சர் உடன் செல்லவில்லை. முதல்- அமைச்சருக்கும், பொதுப்பணித்துறை அமைச்சருக்கும் மிகப்பெரிய பனிப்போர் நடக்கிறது.

    கையில் கிடைத்ததை சுருட்டிக்கொண்டு போகலாம் என்பது போல அரசு நடக்கிறது. எதெற்கெடுத்தாலும் கவர்னர் தடுக்கிறார் என கூறி வருகின்றனர்.

    அதை மீறிதான் மக்களுக்கு நன்மை செய்ய வேண்டும். ஆட்சி செய்ய முடியவில்லை என்றால் தோல்வியை ஏற்று கொண்டு அரசு தானாக பதவி விலகி விட வேண்டும்.

    சட்டசபை செயலர் சபாநாயகரின் கைப்பாவையாக இருந்து கொண்டு அனைத்து குழுவின் செயலையும் முடக்கி வருகிறார். எந்த குழுவும் செயல்பட முடியவில்லை.

    சீனாவில் இறக்குமதி செய்யப்பட்ட ஸ்மார்ட் மீட்டரை ஆய்வு செய்து புதுவையில் போடப்பட்ட 35 ஆயிரம் ஸ்மார்ட் மீட்டரை அகற்றி, வர்த்தக நிறுவனங்களுக்கு போட வேண்டும் என்று கூறினோம்.

    ஆனால், அதற்கான கோப்பை சட்டசபை செயலர் தயாரிக்கவில்லை. இதேநிலை நீடித்தால் சட்டமன்ற குழுவில் நீடிப்பதா? இல்லையா? என யோசிக்க வேண்டிய நிலை ஏற்படும்.

    இந்திய அரசியலமைப்பு சட்டத்தால் கொண்டு வரப்பட்ட உரிமை மீறல் குழு, மதிப்பீட்டு குழுவுக்கு மதிப்பு இல்லை.

    புதுவை அரசு தனியார் நிறுவனம் போல, கட்டப்பஞ்சாயத்து அரசு போல நடக்கிறது. தவறுகளை தட்டிக்கேட்க வேண்டிய கவர்னர் 3-ம் கட்ட அரசியல்வாதி போல செயல்பட்டு வருகிறார்.

    ஆட்சியாளர்கள் தங்கள் தவறுகளை திருத்தி கொள்ள வேண்டும். அதற்கு வாய்ப்பு தருகிறோம். இல்லாவிட்டால் இந்த ஆட்சி அகற்றப்படும். வரும் பாராளுமன்ற தேர்தலில் புதுவையில் காங்கிரஸ், தி.மு.க. கூட்டணி அமைத்து போட்டியிட்டாலும் டெபாசிட் இழக்கும்.

    இவ்வாறு அவர் கூறினார்.
    Next Story
    ×