என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
சிதம்பரம் அருகே வங்கி காவலாளி துப்பாக்கியால் சுட்டு தற்கொலை
Byமாலை மலர்24 Sep 2018 8:20 PM GMT (Updated: 24 Sep 2018 8:20 PM GMT)
சிதம்பரம் அருகே வங்கி காவலாளி துப்பாக்கியால் சுட்டு தற்கொலை செய்து கொண்டார்.
காட்டுமன்னார்கோவில்:
கடலூர் மாவட்டம் சிதம்பரம் அருகே உள்ள குமராட்சி கீழக்கரையை சேர்ந்தவர் வீரநாராயணன் (வயது 51). இவரது மனைவி தனலட்சுமி. இவர்களுக்கு 3 மகள்கள் உள்ளனர். ராணுவ வீரராக பணிபுரிந்து ஓய்வு பெற்ற வீரநாராயணன், புவனகிரியில் உள்ள ஒரு தனியார் வங்கியில் காவலாளியாக பணியாற்றி வந்தார். இதற்காக அவருக்கு வங்கி சார்பில் துப்பாக்கி வழங்கப்பட்டது. தினமும் பணிமுடிந்ததும், வீரநாராயணன் அந்த துப்பாக்கியை தனது வீட்டுக்கு எடுத்து சென்று விடுவதாக கூறப்படுகிறது.
இந்தநிலையில் நேற்று பணிக்கு செல்லாமல் வீட்டில் இருந்த வீரநாராயணன் துப்பாக்கியால் சுட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுபற்றி தகவல் அறிந்ததும் குமராட்சி போலீசார் அங்கு விரைந்து சென்றனர். பின்னர் அவரது உடல் அருகே கிடந்த ஒரு கடிதத்தை போலீசார் கைப்பற்றினர்.
அதில், எனக்கு மூட்டு வலி இருப்பதால், தற்கொலை செய்து கொள்கிறேன். எனது சாவுக்கு யாரும் காரணமில்லை. யாரையும் துன்புறுத்த வேண்டாம் என்று எழுதப்பட்டிருந்ததாக போலீஸ் அதிகாரி ஒருவர் தெரிவித்தார். இந்த சம்பவம் குறித்து குமராட்சி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
கடலூர் மாவட்டம் சிதம்பரம் அருகே உள்ள குமராட்சி கீழக்கரையை சேர்ந்தவர் வீரநாராயணன் (வயது 51). இவரது மனைவி தனலட்சுமி. இவர்களுக்கு 3 மகள்கள் உள்ளனர். ராணுவ வீரராக பணிபுரிந்து ஓய்வு பெற்ற வீரநாராயணன், புவனகிரியில் உள்ள ஒரு தனியார் வங்கியில் காவலாளியாக பணியாற்றி வந்தார். இதற்காக அவருக்கு வங்கி சார்பில் துப்பாக்கி வழங்கப்பட்டது. தினமும் பணிமுடிந்ததும், வீரநாராயணன் அந்த துப்பாக்கியை தனது வீட்டுக்கு எடுத்து சென்று விடுவதாக கூறப்படுகிறது.
இந்தநிலையில் நேற்று பணிக்கு செல்லாமல் வீட்டில் இருந்த வீரநாராயணன் துப்பாக்கியால் சுட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுபற்றி தகவல் அறிந்ததும் குமராட்சி போலீசார் அங்கு விரைந்து சென்றனர். பின்னர் அவரது உடல் அருகே கிடந்த ஒரு கடிதத்தை போலீசார் கைப்பற்றினர்.
அதில், எனக்கு மூட்டு வலி இருப்பதால், தற்கொலை செய்து கொள்கிறேன். எனது சாவுக்கு யாரும் காரணமில்லை. யாரையும் துன்புறுத்த வேண்டாம் என்று எழுதப்பட்டிருந்ததாக போலீஸ் அதிகாரி ஒருவர் தெரிவித்தார். இந்த சம்பவம் குறித்து குமராட்சி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X