search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    சிதம்பரம் அருகே வங்கி காவலாளி துப்பாக்கியால் சுட்டு தற்கொலை
    X

    சிதம்பரம் அருகே வங்கி காவலாளி துப்பாக்கியால் சுட்டு தற்கொலை

    சிதம்பரம் அருகே வங்கி காவலாளி துப்பாக்கியால் சுட்டு தற்கொலை செய்து கொண்டார்.
    காட்டுமன்னார்கோவில்:

    கடலூர் மாவட்டம் சிதம்பரம் அருகே உள்ள குமராட்சி கீழக்கரையை சேர்ந்தவர் வீரநாராயணன் (வயது 51). இவரது மனைவி தனலட்சுமி. இவர்களுக்கு 3 மகள்கள் உள்ளனர். ராணுவ வீரராக பணிபுரிந்து ஓய்வு பெற்ற வீரநாராயணன், புவனகிரியில் உள்ள ஒரு தனியார் வங்கியில் காவலாளியாக பணியாற்றி வந்தார். இதற்காக அவருக்கு வங்கி சார்பில் துப்பாக்கி வழங்கப்பட்டது. தினமும் பணிமுடிந்ததும், வீரநாராயணன் அந்த துப்பாக்கியை தனது வீட்டுக்கு எடுத்து சென்று விடுவதாக கூறப்படுகிறது.

    இந்தநிலையில் நேற்று பணிக்கு செல்லாமல் வீட்டில் இருந்த வீரநாராயணன் துப்பாக்கியால் சுட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுபற்றி தகவல் அறிந்ததும் குமராட்சி போலீசார் அங்கு விரைந்து சென்றனர். பின்னர் அவரது உடல் அருகே கிடந்த ஒரு கடிதத்தை போலீசார் கைப்பற்றினர்.

    அதில், எனக்கு மூட்டு வலி இருப்பதால், தற்கொலை செய்து கொள்கிறேன். எனது சாவுக்கு யாரும் காரணமில்லை. யாரையும் துன்புறுத்த வேண்டாம் என்று எழுதப்பட்டிருந்ததாக போலீஸ் அதிகாரி ஒருவர் தெரிவித்தார். இந்த சம்பவம் குறித்து குமராட்சி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். 
    Next Story
    ×