என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
கொட்டாம்பட்டி அருகே திருமணமான 20 நாளில் புதுமாப்பிள்ளை தற்கொலை
Byமாலை மலர்24 Sep 2018 6:08 PM GMT (Updated: 24 Sep 2018 6:08 PM GMT)
கொட்டாம்பட்டி அருகே குடும்ப பிரச்சினை காரணமாக திருமணமான 20 நாளில் புதுமாப்பிள்ளை விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார்.
கொட்டாம்பட்டி:
மதுரை மாவட்டம் கொட்டாம்பட்டி அருகே உள்ளது, கோட்டப்பட்டி. இங்குள்ள சுடுகாட்டில் 30 வயது மதிக்கத்தக்க வாலிபர் ஒருவர் இறந்துகிடந்துள்ளார். இதனை பார்த்த அக்கிராமத்தை சேர்ந்த சிலர் கொட்டாம்பட்டி போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.
அதன்பேரில் விரைந்து வந்த போலீசார் இறந்துகிடந்த வாலிபரின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக மேலூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பிவைத்தனர்.
பின்னர் போலீசார் நடத்திய விசாரணையில், இறந்துகிடந்த வாலிபர் மதுரையை அடுத்த அரும்பனூர் புதூர் பகுதியை சேர்ந்த வீரன் மகன் காசிவிசுவநாதன்(வயது 30) என்பது தெரியவந்தது. மேலும் அவர் பரோட்டா மாஸ்டராக வேலை செய்து வந்துள்ளார். காசிவிசுவநாதனுக்கு கடந்த 20 நாட்களுக்கு முன்பு திருமணமாகி இருந்தது. அவருடைய மனைவி முத்துலட்சுமி(21). திருமணமான நாளில் இருந்து காசி விசுவநாதன் வீட்டில் அடிக்கடி பிரச்சினை ஏற்பட்டு வந்துள்ளது. இதனால் மனமுடைந்த நிலையில் காணப்பட்ட அவர் தனது சொந்த ஊரான கோட்டப்பட்டிக்கு மோட்டார் சைக்கிளில் சென்றுள்ளார்.
கோட்டப்பட்டிக்கு வந்த அவர் அங்குள்ள சுடுகாட்டில் விஷம் குடித்து தற்கொலை செய்துகொண்டார். அவரது மோட்டார் சைக்கிளில் இருந்த சான்றிதழ்களை வைத்து அவரது விவரங்களை போலீசார் பெற்றனர்.
திருமணமான 20 நாளில் வாலிபர் இறந்துபோன சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. இதுதொடர்பாக கொட்டாம்பட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
மதுரை மாவட்டம் கொட்டாம்பட்டி அருகே உள்ளது, கோட்டப்பட்டி. இங்குள்ள சுடுகாட்டில் 30 வயது மதிக்கத்தக்க வாலிபர் ஒருவர் இறந்துகிடந்துள்ளார். இதனை பார்த்த அக்கிராமத்தை சேர்ந்த சிலர் கொட்டாம்பட்டி போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.
அதன்பேரில் விரைந்து வந்த போலீசார் இறந்துகிடந்த வாலிபரின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக மேலூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பிவைத்தனர்.
பின்னர் போலீசார் நடத்திய விசாரணையில், இறந்துகிடந்த வாலிபர் மதுரையை அடுத்த அரும்பனூர் புதூர் பகுதியை சேர்ந்த வீரன் மகன் காசிவிசுவநாதன்(வயது 30) என்பது தெரியவந்தது. மேலும் அவர் பரோட்டா மாஸ்டராக வேலை செய்து வந்துள்ளார். காசிவிசுவநாதனுக்கு கடந்த 20 நாட்களுக்கு முன்பு திருமணமாகி இருந்தது. அவருடைய மனைவி முத்துலட்சுமி(21). திருமணமான நாளில் இருந்து காசி விசுவநாதன் வீட்டில் அடிக்கடி பிரச்சினை ஏற்பட்டு வந்துள்ளது. இதனால் மனமுடைந்த நிலையில் காணப்பட்ட அவர் தனது சொந்த ஊரான கோட்டப்பட்டிக்கு மோட்டார் சைக்கிளில் சென்றுள்ளார்.
கோட்டப்பட்டிக்கு வந்த அவர் அங்குள்ள சுடுகாட்டில் விஷம் குடித்து தற்கொலை செய்துகொண்டார். அவரது மோட்டார் சைக்கிளில் இருந்த சான்றிதழ்களை வைத்து அவரது விவரங்களை போலீசார் பெற்றனர்.
திருமணமான 20 நாளில் வாலிபர் இறந்துபோன சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. இதுதொடர்பாக கொட்டாம்பட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X