search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    மணல் கடத்திய 2 லாரிகள் பறிமுதல்
    X

    மணல் கடத்திய 2 லாரிகள் பறிமுதல்

    காரையூர் அருகே அனுமதியின்றி மணல் அள்ளிச்சென்ற லாரியை போலீசார் பறிமுதல் செய்தனர்.
    காரையூர்:

    காரையூர் அருகே உள்ள அரசமலை பகுதியில் இருந்து மணல் கடத்தி செல்லப்படுவதாக வருவாய்த்துறையினருக்கு தகவல் வந்தது. அதன்பேரில் பொன்னமராவதி தாசில்தார் பாலகிருஷ்ணன் தலைமையிலான அதிகாரிகள் அரசமலை பகுதியில் சோதனையில் ஈடுபட்டனர். அப்போது அந்த வழியாக வந்த ஒரு லாரியை நிறுத்தி அதிகாரிகள் சோதனை செய்தனர். அப்போது அதில் மணல் கடத்தி வந்தது தெரிய வந்தது. இதையடுத்து அந்த லாரியை அதிகாரிகள் பறிமுதல் செய்து, காரையூர் போலீஸ் நிலையத்தில் ஒப்படைத்தனர்.

    இதேபோல அன்னவாசல் அருகே உள்ள மாங்குடி பகுதியில் போலீஸ் இன்ஸ்பெக்டர் சுமதி தலைமையிலான போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது அந்த வழியாக வந்த ஒரு டிப்பர் லாரியை நிறுத்தி சோதனை செய்தார். அதில் உரிய அனுமதி இல்லாமல் மணல் ஏற்றி சென்றது தெரிய வந்தது. இதனையடுத்து அந்த லாரியை போலீசார் பறிமுதல் செய்து, அன்னவாசல் போலீஸ் நிலையத்தில் ஒப்படைத்தனர். 
    Next Story
    ×