என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
ஓடும் ரெயிலில் இருந்து தவறி விழுந்த லாரி டிரைவர் பலி
Byமாலை மலர்24 Sep 2018 2:46 PM GMT (Updated: 24 Sep 2018 2:46 PM GMT)
பண்ருட்டியில் ஓடும் ரெயிலில் இருந்து தவறி விழுந்த லாரி டிரைவர் சம்பவ இடத்திலேயே பலியானார்.
பண்ருட்டி:
சிதம்பரம் அருகே உள்ள வல்லம்படுகை காமராஜ் நகரில் வசித்து வந்தவர் தியாகு(வயது 33). லாரி டிரைவர். இவர் வேலூர் செல்வதற்காக நேற்று முன்தினம் இரவு சிதம்பரம் ரெயில் நிலையத்துக்கு வந்தார். பின்னர் ராமேசுவரத்தில் இருந்து திருப்பதி நோக்கி சென்ற எக்ஸ்பிரஸ் ரெயிலில் முன்பதிவு செய்யாத பெட்டியில் அவர் ஏறினார்.
ரெயிலில் பயணிகள் கூட்டம் அதிகமாக இருந்ததால் தியாகு, வாசலில் நின்று பயணம் செய்துள்ளார். பண்ருட்டி திருவதிகை என்ற இடத்தில் ரெயில் வந்தபோது, நிலைதடுமாறி ரெயிலில் இருந்து அவர் தவறி கீழே விழுந்தார். இதில் பலத்த காயமடைந்த தியாகு சம்பவ இடத்திலேயே பலியானார்.
இதை அந்த பகுதியை சேர்ந்தவர்கள் பார்த்து போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். அதன்படி பண்ருட்டி போலீசாரும், கடலூர் ரெயில்வே போலீசாரும் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்றனர். பின்னர் தியாகுவின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக பண்ருட்டி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
இது குறித்த புகாரின் பேரில் கடலூர் ரெயில்வே போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X