search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    தேன்கனிக்கோட்டையில் விபத்து- மாணவி பலி
    X

    தேன்கனிக்கோட்டையில் விபத்து- மாணவி பலி

    தேன்கனிக்கோட்டையில் நடந்து வந்த மாணவி மீது அடையாளம் தெரியாத கார் மோதியது. இதில் அவர் பரிதாபமாக உயிரிழந்தார்.
    தேன்கனிக்கோட்டை:

    கிருஷ்ணகிரி மாவட்டம் தேன்கனிக்கோட்டையை அடுத்த அன்னியாளம் கிராமத்தை சேர்ந்தவர் கோபால். இவரது மகள் அர்ச்சனா (வயது 25). கோபாலின் தம்பி சந்திரப்பா மகள்கள் மாணக்கியா (19), நிவேதிதா (19), இன்னொரு உறவினர் சீனிவாசன் மகள் யாஷிகா (20). 

    இவர்கள் 4 பேரும் நேற்று மாலை தோட்டத்தில் பூ பறித்துவிட்டு வீட்டுக்கு நடந்து வந்து கொண்டு இருந்தனர். தளி- தேன்கனிக்கோட்டை சாலையில் வந்தபோது அடையாளம் தெரியாத கார் அவர்கள் மீது மோதிவிட்டு நிற்காமல் சென்றுவிட்டது. இந்த விபத்தில் 4 பேரும் படுகாயம் அடைந்து ஓசூர் தனியார் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டனர். இதில் இன்று காலை சிகிச்சை பலனின்றி யாஷிகா இறந்தார்.

    இந்த விபத்து குறித்து தேன்கனிக்கோட்டை போலீசார் வழக்குபதிவு செய்து விசாரித்து வருகிறார்கள். விபத்தில் பலியான யாஷிகா ஓசூரில் உள்ள தனியார் கல்லூரியில் லேப் டெக்னீசியன் படித்தார்.
    Next Story
    ×