search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    திருபுவனையில் சூறை காற்றில் விழுந்து ஒரு மாதமாகியும் அகற்றப்படாத புளிய மரம்
    X

    திருபுவனையில் சூறை காற்றில் விழுந்து ஒரு மாதமாகியும் அகற்றப்படாத புளிய மரம்

    திருபுவனையில் ஒரு மாதத்துக்கு முன்பு சூறை காற்றினால் சாய்ந்த புளியமரம் இதுவரை அகற்றப்படாததால் மாணவர்கள் மற்றும் பொதுமக்கள் பாதிப்படைந்துள்ளனர்.

    திருபுவனை:

    திருபுவனை கூட்டுறவு நூற்பாலை அருகே சுதானா நகர் உள்ளது. தேசிய நெடுஞ்சாலையையொட்டி உள்ள இந்த பகுதியில் தனியார் பள்ளி மற்றும் 5-க் கும் மேற்பட்ட கடைகள் உள்ளன. இதற்கிடையே கடந்த ஒரு மாதத்துக்கு முன்பு வீசிய சூறைகாற்றினால் அங்கிருந்த ராட்சத புளிய மரம் வேறோடு சாய்ந்தது. இதனால் அப்பகுதியில் மின்சாரம் துண்டிக்கப்பட்டது. அப்போது மின்துறை ஊழியர்கள் விரைந்து செயல்பட்டு மின்துண்டிப்பை சரி செய்தனர். ஆனால் பொதுப்பணித்துறையினர் சாயந்த புளிய மரத்தை வெட்டி அகற்றவில்லை.

    புளியமரம் விழுந்து ஒரு மாதமாகியும் இதனை கண்டு கொள்ளாமல் உள்ளனர். இதனால் அவ்வழியே செல்லும் பள்ளி மாணவர்கள், பொதுமக்கள் பெரும் பாதிப்புகுள்ளாகி வருகிறார்கள். மேலும் இருசக்கர வாகன ஓட்டிகளும், கனரக வாகனங்கள் வரும் போது ஒதுங்கி செல்ல முடியாமல் விபத்தில் சிக்கும் நிலை ஏற்பட்டுள்ளது. எனவே பொதுப்பணித்துறையினர் போர்க்கால அடிப்படையில் சாய்ந்து விழுந்த புளிய மரத்தை வெட்டி அப்புறப்படுத்த வேண்டும் என்று அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    Next Story
    ×