என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
காவேரிப்பாக்கம் அருகே மகனை காப்பாற்ற ஓடிய தாய் கிணற்றில் தவறி விழுந்து பலி
பனப்பாக்கம்:
காவேரிப்பாக்கத்தை அடுத்த குப்பத்துமோட்டூர் கிராமத்தை சேர்ந்தவர் ராஜேஷ் (வயது34), விவசாயி. இவருடைய மனைவி காமாட்சி (30). இவர்களுக்கு ஹேமலா (9) என்ற மகளும், விக்னேஷ் (7) என்ற மகனும் உள்ளனர்.
நேற்று காலை காமாட்சி விவசாய நிலத்திற்கு ஆடு மேய்க்க சென்றுள்ளார். அப்போது தனது மகன் விக்னேசையும் அழைத்து சென்றார். அங்கு ஆடு மேய்த்தபோது விக்னேஷ் விளையாடிக் கொண்டிருந்தான். திடீரென்று அவனை காணவில்லை. அவனை தேடியபோது அருகில் உள்ள கிணற்றை எட்டிப்பார்த்துக் கொண்டிருந்தான். இதனால் அதிர்ச்சியடைந்த காமாட்சி மகனை காப்பாற்றுவதற்காக அலறியடித்துக் கொண்டு கிணற்றை நோக்கி ஓடினார்.
கிணற்றின் அருகில் சென்றபோது திடீரென கால் தடுக்கி காமாட்சி, கிணற்றுக்குள் விழுந்துவிட்டார். உடனே அருகில் விவசாய நிலத்தில் வேலை செய்து கொண்டிருந்தவர்கள் ஓடிச்சென்று காமாட்சியை மீட்டு வாலாஜா அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு அவரை டாக்டர்கள் பரிசோதனை செய்து பார்த்து காமாட்சி வரும் வழியிலேயே இறந்துவிட்டதாக தெரிவித்தனர்.
இந்த சம்பவம் குறித்து காவேரிப்பாக்கம் போலீஸ் நிலையத்தில் ராஜேஷ் புகார் செய்தார். சப்-இன்ஸ்பெக்டர் சமேதா வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்