search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    நோபல் பரிசுக்கு பிரதமர் மோடியை தேர்வு செய்ய என்னுடன் கைகோருங்கள்- தமிழிசை அழைப்பு
    X

    நோபல் பரிசுக்கு பிரதமர் மோடியை தேர்வு செய்ய என்னுடன் கைகோருங்கள்- தமிழிசை அழைப்பு

    ஆயுஷ்மான் பாரத் திட்டத்தை கொண்டு வந்த பிரதமர் மோடிக்கு அமைதிக்கான நோபல் பரிசுக்கு தேர்வு செய்ய என்னுடன் கைகோர்க்க வேண்டும் என தமிழிசை சவுந்தரராஜன் அழைப்பு விடுத்துள்ளார். #BJP #PMModi #TamilisaiSoundararajan
    சென்னை:

    நாடு முழுவதும் சுமார் 10 கோடி மக்கள் பயன்பெரும் வகையிலான தேசிய மருத்துவ காப்பீடு திட்டத்தை பிரதமர் மோடி நேற்று ஜார்கண்டில் தொடங்கி வைத்தார். தமிழகத்தில் ஏற்கனவே இருந்த முதலமைச்சர் காப்பீடு திட்டம், இந்த தேசிய மருத்துவ காப்பீடு திட்டத்துடன் இணைக்கப்பட்டது. 

    இந்நிலையில், பாஜக தமிழக தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் தனது ட்விட்டர் பதிவில், “உலகின் மிகப்பெரிய சுகாதார திட்டத்தை கொண்டு வந்த பிரதமர் மோடியை 2019-ம் ஆண்டின் நோபல் பரிசுக்கு தேர்வு செய்ய அனைவரும் என்னுடன் கைகோர்க்க வேண்டும்” என பதிவிட்டுள்ளார். 


    Next Story
    ×